தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Saturday, July 31, 2004

சுப்புலட்சுமி டீச்சர் in 3rd standard - PART 2

தலைமையாசிரியர் அறை.
"என்ன சுப்புலட்சுமி டீச்சர், இப்போ தான் 3ம் வகுப்புக்கு போனீங்க அதுக்குள்ள வந்துட்டீங்க. ஏதாவது பிரச்சினையா" என்று கேட்டார்.

சுப்புலட்சுமி ஒரு பெருமூச்சு விட்டு,
"ஆமாம் சார், ஒரு பிரச்சினை தான். உங்களுக்கு ஞானம்'ங்கிற பையனை தெரியுமா சார்?" என்றார்.

"ஓ நல்லா தெரியுமே, ரொம்ப புத்திசாலி பையன்னு கேள்வி பட்டு இருக்கேன்" என்றார்.

"அவன் தான் சார் இப்போ பிரச்சினை பண்றான்"

"அவனா?? என்ன பண்றான் சொல்லுங்க" என்றார் சந்தேகத்துடன்.

"அவனுக்கு இருக்குற அறிவுக்கு 5ம் வகுப்பு படிக்கணுமாம், அவனை 3ம் வகுப்புல இருந்து மாத்தி 5ம் வகுப்புல போடணுமாம். இதெல்லாம் நடக்குற காரியமா சார். க்ளாஸ் எடுக்க விடாமல் இம்சை பண்றான் சார். என்ன பண்ணலாம் சொல்லுங்க" என்றார் ஆயாசத்துடன்.

தலைமையாசிரியர் சிறிது நேரம் சிந்தித்து விட்டு
"நீங்க அவனை கூட்டிகிட்டு வாங்க. 5ம் வகுப்பு பசங்களை கேட்க்குற மாதிரி கேள்வி கேளுங்க. நிஜமாவே அவன் புத்திசாலியா இருந்தா 5ம் வகுப்புல போட்டுடலாம்"னு சொன்னார்.
........
ஞானமும், சுப்புலட்ச்சுமி டீச்சரும் இப்போது தலைமையாசிரியர் அறையில்.

டீச்சர் சொல்றார்
"ஞானம், இப்போ நான் உன்கிட்ட கேள்வி கேட்பேன், நீ எல்லாத்துக்கும் சரியா விடை சொல்லிட்டா, உன் விருப்பப்படி நீ 5ம் வகுப்புக்கு போகலாம், இல்லை 3ம் வகுப்பு தான், சரியா?" என்றார்.

ஞானமும் அதற்கு ஒப்புக்கொண்டு தலையாட்டினான்.

டீச்சர்:"10ஐ 5ஆல் வகுத்தால்?"

ஞானம் :"2"

டீச்சர்:"1000ஐ 10ஆல் பெருக்கினால்?"

ஞானம்: "10000"

டீச்சர்:"12 பெருக்கல் 12"

ஞானம்: 144

டீச்சர்:"100ஐ 4ஆல் வகுத்தால்"

ஞானம்: 25

எல்லாவற்றிர்க்கும் விடை உடனே உடனே வந்தது. டீச்சர் அசந்து போனார்.

தலைமையாசிரியர் உடனே,
"டீச்சர் வேற சப்ஜெக்ட்ல கேளுங்க" என்றார்.

டீச்சர் யோசித்து

"1 கிலோ மீட்டர் என்பது?"

"1000 மீட்டர்"

"பிராணவாயு எனப்படுவது?"

"ஆக்சிஜன்"

இப்படியே நிறைய கேள்விகள் .. எல்லாவற்றிர்க்கும் சரியான விடை கூறி அசத்தினான்.

தலைமையாசிரியர் மீண்டும் குறுக்கிட்டு
" பொதுவா கேளுங்க இப்போ" என்றார்.

டீச்சர் 1 நிமிடம் யோசித்து

" பசுமாட்டுக்கு 4 இருக்குறது எனக்கு 2 மட்டும் இருக்கு. அது என்ன?"
என்றார்.
ஞானம் சிறிதும் யோசிக்காமல் உடனே கூறினான்.
" கால்கள் டீச்சர் " என்றான்.

" சரி, உன் டவுசர்ல இருக்குறது என்கிட்ட இல்லே. அது என்ன?" என்று கேட்டார்.

ஞானம் ஒரு சில வினாடிகள் யோசித்தான், பிறகு
" பாக்கெட் டீச்சர் " என்று பதிலளித்தான்.

டீச்சர் அடுத்த கேள்வி தொடங்கும் முன், தலைமை ஆசிரியர் நடுவில் புகுந்து

"போதும் கேள்விகள். பையன் பாஸ் பண்ணிட்டான். அவனை 8ம் வகுப்புக்கு மாத்திடுங்க" என்றார்.

சுப்புலட்சுமி திடுக்கிட்டு போய்

"என்ன சார் சொல்றீங்க? இவனை 8ம் வகுப்பில போடணுமா ஏன்? 5ம் வகுப்பு போகணும்ன்னு தானே கேட்டான்?" என்றார்.

தலைமை ஆசிரியர் மெதுவான குரலில்
"கடைசி 2 கேள்விகளுக்கு நானே தப்பான பதில் தான் யோசிச்சேன்" என்றார்.

0 Comments:

Post a Comment

<< Home