தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Friday, July 23, 2004

கதவை மூடு - பகுதி 1

நான் திருச்சியில இருக்குற பிஷப் ஹீபர் காலேஜ்ல தான் யு.ஜி (இளம்கலை) படிச்சேன். என் கூட படிச்ச ஆனந்த் கொஞ்சம் விளைஞ்ச பையன். எனக்கு திருச்சி ரொம்ப தெரிஞ்ச ஏரியா. அதுனால நான் ரொம்ப வால் தனம் எல்லாம் செய்யாம அமைதியா காலேஜ் போனோமா வந்தோமான்னு இருப்பேன். ஏன்னா யாராச்சும் பார்த்துட்டு வீட்டுல போட்டு குடுத்துடுவாங்கன்னு பயம். அவன் கும்பகோணத்துல இருந்து வந்து இருந்தான். ஆட்டம் கொஞ்சம் ஜாஸ்தியாவே போடுவான். செக்ஸ் ஜோக் நிறைய சொல்லுவான். எப்பவும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்.

காலேஜ் பக்கத்துல ஒரு மேன்ஷன்ல ரூம் போட்டு தங்கி இருந்தான். அவன் ரூமுக்கு போனா நல்லா பொழுது போகும். மெத்தைக்கு அடியில குறிஞ்சி, முல்லை, மருதம், சரோஜாதேவி புத்தகமா இருக்கும். அதை எடுத்து சரவுண்ட் எபெக்ட்டோட(effect) படிப்பான். நாங்க படிச்சது மாலை நேர கல்லூரி. பகல் எல்லாம் வெட்டியா சுத்திகிட்டு இருப்பான் (நான் சமத்து. வீட்டுல தான் இருப்பேன்). வாரத்துக்கு எப்படியும் 2 தடவை பிட் படம் ஓட்டுற தியேட்டருக்கு போயிடுவான். படம் பார்த்து வந்துட்டு கதை சொல்லுவான். நிஜமாவே படம் நல்லா இருக்கோ இல்லையோ அவன் சொல்ற கதை நல்லா இருக்கும்.

அப்போ திருச்சியில முல்லை தியேட்டர்ன்னு ஒண்ணு இருந்திச்சி (இப்போ இருக்கா தெரியலே). அங்கெ எப்பவும் பிட் படம் தான் போடுவாங்க. அவன் அந்த தியேட்டருக்கு வார வாடிக்கையாளன். ஒருசமயம் என்ன ஆச்சு, பையன் 3 நாள் காலேஜ்க்கு வரல. என்னடான்னு விசாரிக்க அவன் ரூமுக்கு போனோம். கட்டில படுத்துகிட்டு மூஞ்சி வரை மூடிகிட்டு தூங்கி இருந்தான். மெதுவா தொட்டு எழுப்பினேன். அவன் உடம்பு லேசாய் சுட்டது. காய்ச்சல் என்று யூகித்தேன்.
"ஆனந்த்.. நான் தாண்டா.. எந்திரிடா"
புரண்டு படுத்து பின் முனகியவாரே எழுந்து அமர்ந்தான். தாடி லேசாக முளைத்து இருந்தது. கண்ணில் களைப்பு தெரிந்தது. தண்ணீர் எடுத்து குடுத்தேன். வாய் ஈரம் ஆகும் வரை குடித்தவன் அதை கீழே வைத்தான்.
"சொல்லுடா ஆனந்த்.. ஏன் திடீர்னு காய்ச்சல்?"
 காலை மடக்கி, நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்தான். பின் மெதுவாக சுவற்றில் சாய்ந்து களைத்த கண்களால் எங்களை பார்த்தான்.
"மனுஷன் 3 நாளா காலேஜ் வரல, இப்போ தான் எனக்கு என்ன ஆச்சுன்னு பார்க்க தோணுச்சாடா உங்களுக்கு" என்று கேட்டான்.
"இல்ல மச்சி, முல்லைக்கு போறேன்னு சொன்னியா நீ.. படம் ரொம்ப பிடிச்சி போய் தினமும் 4 காட்சி பார்க்குறியோன்னு நினைச்சிட்டோம் நாங்க.. அதான்" என்று இழுத்தேன்.
முறைத்து பார்த்து விட்டு.."கொழுப்புடா உங்களுக்கு.. திமிர்பிடிச்ச பயல்களா" திட்டு ஒன்றை உதிர்த்தான்.
"சரிடா எங்களை திட்டுறதை விடு.. உனக்கு என்ன ஆச்சு?? படத்துல படு பயங்கர சீன்?? பார்க்கக்கூடாதது எதையாச்சும் பார்த்துட்டியா?? காய்ச்சலே வந்துடிச்சி?" என்று சொல்லி கண்ணடித்தேன்.
சட்டென்று அவன் முகம் மாறியது. கிட்டதட்ட அழும் நிலைக்கு போனான். நாங்களும் கொஞ்சம் சிரிப்பை நிறுத்தி விட்டு அவனை பார்த்தோம். "ஆமாம்டா, அந்த படம் தான் என் காய்ச்சலுக்கு காரணம்.." என்று தொடங்கினான். இனி அவன் சொல்வதாய் இந்த கதை தொடர்கிறது...


2 Comments:

  • At Fri Jul 23, 03:31:00 PM EDT, Blogger Boston Bala said…

    அநியாயத்துக்கு சஸ்பென்சில் நிறுத்திட்டீரே :( என்னாச்சு சீக்கிரம் சொல்லுங்க....

     
  • At Sat Jul 24, 04:10:00 AM EDT, Blogger Gyanadevan said…

    பாலா சார், இதுல சஸ்பென்ஸ் ஒண்ணும் இல்லே. டைப் செய்ய டைம் கிடைக்கலே. அவ்வளவு தான். இதோ டைப் செஞ்சிகிட்டே இருக்கேன்.... சீக்கிரம் பப்ளிஷ் பண்ணிடறேன்.

     

Post a Comment

<< Home