தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Wednesday, July 14, 2004

அசரீரி

ஞானம் ஒருமுறை ஆப்பிரிக்காவின் மத்திய பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்தான். மரங்கள் அடர்ந்து, சூரிய வெளிச்சம் உள்ளே புக முடியாத அளவிற்கு இருட்டு. கையில் இருந்த டார்ச் உபயோகித்து நடந்தான். திடீரென அவனை சுற்றி சலசலப்பு கேட்டது. ஒரு நிமிடம் நின்று உன்னிப்பாக கேட்டான். அமைதி மட்டும் சூழ்ந்திருந்தது. ஆசுவாசமாய் அடுத்த அடி எடுத்து வைத்தான், அவ்வளவு தான், புற்றீசல் போல் வித விதமாய் சப்தமிட்டுக்கொண்டு மனிதகறி சாப்பிடும் ஆதிவாசி கூட்டம் ஒன்று அவனை சுற்றிக்கொண்டது. ஞானத்தை சுற்றி சுற்றி வந்து "ஓஓ ஆஆ" என்று ஓலமிட்டது.. ஞானம் செய்வதறியாது திகைத்துப் போனான்.
" ஐயோ கடவுளே!! நான் நல்லா மாட்டிகிட்டேன். செத்தேன், செத்தேன்" என்று திருவிளையாடல் நாகேஷ் போல் புலம்பினான்.
" இல்லை, சாகவில்லை நான் இருக்கிறேன்" என்று ஒரு அசரீரி வானத்தில் ஒலித்தது, ஒரு ஒளிகற்றை அவன் முகத்தில் அடித்தது, பின் பேசியது
"ஞானம் நீ இன்னும் சாகவில்லை.. பயப்படாதே, உன் காலுக்கு கீழே ஒரு கல் இருக்கிறது பார், அதை எடுத்து, மண்டை ஓட்டை குச்சியின் உச்சியில் சொருகி, அதை வைத்துக் கொண்டு உன் முன்னால் ஒருவன் இருக்கின்றானே, அவன் மண்டையில் ஓங்கி அடி" என்று சொல்லி விட்டு நிறுத்தியது.
என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம், யார் சொல்லி செய்கிறோம் என்று ஒன்றும் யோசிக்காமல், ஞானம் குனிந்தான்..கல் எடுத்தான்.. ஆதிவாசி தலைவனின் மண்டையில் ஓங்கி அடித்தான்.. அது வரை கத்திக் கொண்டிருந்த கும்பல் அப்படியே உறைந்து நின்றது.. அப்போது அசரீரி மீண்டும் பேசியது..
"ஞானம், உன் கவலை தீர்ந்தது. இப்போது நீ நிஜமாகவே செத்தாய்"
சுற்றி இருந்த ஆதிவாசி கும்பல் ஆக்ரோசமாய் ஞானத்தின் மேல் பாய்ந்தது.

0 Comments:

Post a Comment

<< Home