தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Sunday, July 11, 2004

பிச்சை மந்திரி

இந்த வாரத்(9-ஜூலை - 2004) திண்ணையில் அக்கினிபுத்திரனின் (சிங்கப்பூர்) கடிதம் படித்தேன். ஞானியின் போன வார கடிதத்திற்கு எதிர்வினையாம்... சிரிப்பு தான் வருகிறது. கொஞ்சமும் அர்த்தம் இல்லாமல் இருக்கிறது. கருணாநிதியின் செயல்களை நியாயப்படுத்த மட்டுமே பார்க்கிறார். ஞானியின் வார்த்தைகளின் அர்த்தத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. ஏதோ திமுகவில் உள்ள அத்தனை பேரும் கருணாநிதியின் வாக்கை வேதவாக்காய் நினைப்பது போல் எழுதி இருக்கிறார். சத்தியமாய் அவர் சொல்வது போல் திமுகவில் உள்ள அத்தனை பேரும் முட்டாள்கள் அல்ல, அதாவது கருணாநிதியின் பேச்சை அப்படியே கேட்டு நடப்பதற்கு.

ஞானியின் கடிதம் எவ்வளவு தூரம் இவரை சுட்டிருந்தால் இப்படி புலம்பி இருப்பார்?? மூளை மழுங்கி போய் இருக்கும் சில தொண்டர்களுக்கு வேண்டுமானால் கருணாநிதி செய்வது எல்லாம் சரியாக படலாம். நானும் திமுக காரனாக இருந்தேன். ஆனால் என்னால் கருணாநிதியின் குடும்பத்தை வளர்க்க முடியாது. எப்போது கருணாநிதிக்கு பேரன், பையன் முக்கியம் ஆனதோ அப்போதே நான் அவரை வெறுக்க ஆரம்பித்து விட்டேன். அக்கினி புத்திரனுக்கு வேண்டுமானால் கருணாநிதியின் குடும்பம் முக்கியமாக படலாம். ஆனால் எனக்கு இல்லை. தயாநிதி மாறன் மந்திரி ஆனது இவருக்கு தப்பாய் படவில்லையாம். இதுவே இவருக்கு உறைக்கவில்லை என்றால் இனி என்ன நடந்தாலும் உறைக்க போவதில்லை.

திமுக என்னவோ மத்திய அரசின் தூண் போல நினைத்துக்கொண்டு அவர்களை பற்றி உயர்வாக நினைத்து கொண்டு இருக்கிறார்கள். அடுத்த முறை காங்கிரஸ் மட்டும் தனி பெரும்பான்மை பெறட்டும், அப்போது இருக்கிறது, திமுகாவுக்கு. பதவி வேண்டாம் என்று ஒரு பேச்சு, தந்தால் இந்த துறை தான் வேண்டும் என்று அடம். சின்ன குழந்தை பல்பம் கேட்பது போல், அழுது ஆர்ப்பாட்டம் செய்து, மிரட்டி, இன்னொருவர் போட்ட பிச்சையில் மந்திரி சுகத்தை அனுபவித்து வரும் திமுக......
இது எப்படி என்றால், வீட்டுக்குள்ளே கூட்டி வந்த நாய்க்கு பிஸ்கட் போட்டு அமைதியாய் இருக்க சொன்னால், அது விருந்தாளிக்கு குடுத்த பிஸ்கட் தான் வேன்டும் என்று விடாமல் குரைத்து அதை பிடுங்கி தின்று ஏப்பம் விட்டு கொண்டு, வீட்டுக்கு தானே ராஜா என்று சுற்றி வருகிறது... அதையும் உண்மை என்று சிலர் நம்பி ஏமாந்து வக்காலத்து வாங்குவது....... வேண்டாம்... ரொம்ப கேவலமாக வருகிறது...

கருணாநிதியின் வயதிற்கு தான் மரியாதை தருகிறார்கள் என்பதை இவர்கள் எப்போது தான் புரிந்து கொள்ள போகிறார்களோ????????????

0 Comments:

Post a Comment

<< Home