தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Friday, July 02, 2004

இனிய இணைய நண்பர்களே

என்னோட பதிவை நாலஞ்சி பேர் படிக்கிறாங்கன்னு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவங்க எல்லாருக்கும் என்னோட நன்றி. நான் தினமும் 10, 15 பேரோட வலைபதிவு போய் படிக்கிறேன். 6 மாசமா படிச்சிட்டு தான் இருக்கேன், "பரி" பக்கத்துல இருந்து தான் வலை பதிவு போடுறது எப்படின்னு கத்துகிட்டேன். அப்புறம் தான் சொந்தமா ஆரம்பிச்சேன். உண்மையாய் சொன்னா, வலைபதிவு தொடங்குறது இலவசம்னு தெரிஞ்சதும் தான் தொடங்கினேன் :-))

பரி, குசும்பன், அருண் வைத்தியனாதன், டுபுக்கு, ரங்கா, பாரா, கிருபா, கொஸப்பேட்டை, இட்லி வடை, பாலாஜி, ராசா மற்றும் சிலரது வலைபதிவுகளை வாசிப்பேன். நல்லா இருக்கு, நல்லா பொழுது போகுது, பல விஷயங்களை பகிர்ந்து கொண்ட மாதிரி இருக்கு.

இப்போ நான் இருக்குறது பிரிஸ்டல் - அடுத்த மாசம் இந்தியா வந்துடுவேன். அப்புறம் தான் அங்கே வீடு பார்த்து, இணைய இணைப்பு வாங்கி.. செட்டில் ஆகணும். அந்த நேரத்துலே, அலைச்சல் காரணமா ஒரு சில நாட்கள் என்னால் வலை பதியாம போக முடியலாம், எனவே என் இனிய இணைய நண்பர்களே, நான் காணவில்லைனு மட்டும் நினைச்சிடாதீங்க.

நன்றி.

0 Comments:

Post a Comment

<< Home