தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Wednesday, June 30, 2004

லல்லூங்கிலம்

லல்லு, அவர் மனைவி மற்றும் மகன், மூவரும் கன்னியாகுமரியில் இருந்து பாட்னாவுக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தனர். லல்லு கீழ் பெர்த்திலும், அவர் மனைவி நடு பெர்த்திலும், மகன் மேல் பெர்த்திலும் படுத்திருந்தனர். ரயில் நடுவில் ஒரு சிறிய கிராமத்தில் நின்றது. முழித்து பார்த்த பையனுக்கு சாக்லேட் சாப்பிட தோன்றியது. அப்பாவை எழுப்பி வாங்கி தர சொன்னான். லல்லுவும் எழுந்து பையனை அழைத்து கொண்டு வெளியே சென்றார். சாக்லேட் வாங்கி கொண்டு திரும்பி வந்து பார்த்தால், பையனின் பெர்த்தில் யாரோ ஒருவர் படுத்திருந்தார். லல்லு அவரை எழுப்பி ஹிந்தியில் அது அவர் பையன் படுத்திருந்த இடம் என்றார். ஆனால் அவருக்கு தமிழ் தவிர வேறு எதுவும் தெரியாது. பொறுமை இழந்த லல்லு ஸ்டேஷன் மாஸ்டரை அழைத்தார். அவரிடமும் ஹிந்தியில் பிரச்சினையை விளக்கி கூறினார். ஆனால் அவருக்கு தமிழ், ஆங்கிலம் தவிர வேறு எதுவும் தெரியாது. எனவே ஆங்கிலத்தில் சொல்ல சொன்னார்...

லல்லுவும் உடனே..
"That man sleeping on top of my wife is not giving birth to my child."

0 Comments:

Post a Comment

<< Home