தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Thursday, June 24, 2004

அப்பாவி தமிழன் ஒருவன்

அய்யா ராமதாஸ் அவர்களுக்கு,
ஒரு அப்பாவி தமிழனின் ஓலை, மடல், கடிதம், இல்லை இல்லை விண்ணப்பம்னு வச்சிகலாம். கொஞ்ச நாளா நீங்க ரொம்ப அழும்பு பண்றீங்க. தாங்க முடியல. நீங்க மரம் வெட்டி ரோட்டை மறிச்சி அரசியல் பண்ணின காலத்துல நான் ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கேன். அப்புறம் கொஞ்சம் அரசியல் கத்துகிட்டு, தெளிவாகி எங்கே சந்து கிடைக்குமோ அங்கே சிந்து பாடி, அப்படி இப்படி பெரிய தலை ஆயிட்டீங்க. இப்போ உங்க புள்ளையும் உங்களை மாதிரி வளர வைக்கிறீங்க. இதெல்லாம் தப்பு இல்லீங்க. மரம் போனா போகுது, 10, 20 வருஷம் கஷ்டப்பட்டு வளர்த்துடலாம். பஸ் எரிச்சதும் ஒண்ணும் இல்லீங்க. காப்பீடு இருக்கும் வாங்கிக்கலாம். பையன் அரசியலுக்கு வர்றது, பதவி பிடிக்கிறது எல்லாம் உங்க குடும்ப - மன்னிச்சிகங்க - கட்சி சம்மந்தப்பட்டது. நீங்க நேரா போய் பதவி வாங்கினீங்களோ, கொல்லை பக்கம் போய் வாங்கினீங்களோ, தெரியாது, அதை பத்தியும் கவலை இல்லை. விஜயகாந்தும் நீங்களும் இப்போ கொஞ்ச நாளா அறிக்கை மேல அறிக்கை விட்டு ஒருத்தரை ஒருத்தர் திட்டிகிட்டு இருக்கீங்க. விஜயகாந்த் பாவம் ஒரு பாதுகாப்புக்கு மறைமுகமா உங்களையும் உங்க புள்ளையையும் காய்ச்சினார். நீங்க பெரிய மனசு பண்ணி அதை கண்டுக்காம இருந்திருந்தா, இந்த பதிவே அவசியம் இருந்திருக்காது. அட, நீங்க கண்டுகிட்டது கூட தப்பு இல்லீங்க, உங்க பக்கத்து நியாயம் மட்டும் சொல்லிட்டு விட்டு இருந்தா நீங்க பெரிய இடத்து அரசியல்வாதியா நினைச்சி இருக்கலாம், ஆனா நீங்க, 3ம் தர பேச்சாளர் மாதிரி அவரை போய் "அரைவேக்காடு.." அது இதுனு சொல்லி உங்க மானத்தை காத்துல விட்டுட்டீங்க. அவங்களும் சும்மா இருந்தாங்களா, உங்களை மாதிரி ஆகனும்னு, கொடும்பாவி எரிச்சாங்க. உங்களுக்கு பயம் வந்து நீங்களும் கொடும்பாவி எரிச்சீங்க. இத்தோட கதை முடிஞ்சா பரவால்ல, ஆனா முடிக்கலியே, நீங்க உங்க குண்டர் - மன்னிக்கவும் - தொண்டர் படை விட்டு ரசிகர் மன்றம் எல்லாம் எரிச்சீங்க.. தேவையா இது?

அய்யா இதுவரை கூட உங்க மேல ரொம்ப குத்தம் சொல்ல முடியாதுங்க. அடுத்து போட்டீங்க பாருங்க ஒரு குண்டை.. அதுதாங்க இந்த பதிவுக்கு காரணம். உங்க வலது கை "காடு வெட்டி குரு" தான் அந்த குண்டை போட்டார்(நீங்க தான் சொல்லி போட வச்சி இருப்பீங்க). "விஜயகாந்த் படங்கள் எங்கேயும் ஓட விட மாட்டோம், மீறி திரையிட்டால் அங்கே நடப்பதற்க்கு நாங்கள் பொறுப்பல்ல". என்ன இது?? அறிக்கையா? மிரட்டலா? விஜயகாந்துக்கு வேட்டு வைக்கிறீங்களா இல்லை படம் பார்க்க வர்ற எங்களை மிரட்டுறீங்களா? படப்பெட்டியை தூக்கி என்ன பிரயோசனம், வாங்கின வினியோகஸ்தர்களுக்கு நஷ்டம், ஸ்கீரீனை கிழிச்சி எரிச்சி தியேட்டர் முதலாளிக்கு நஷ்டம், இப்படி எல்லாம் செஞ்சா விஜயகாந்த் பயப்படலாம், இல்லை அவரும் உங்களை மாதிரி இறங்கி பின்னங்கால் தூக்கி உதைக்கலாம். நாங்க என்னையா பாவம் செஞ்சோம்? நீங்க போடுற சண்டையிலே இன்னைக்கி ஒரு கர்ப்பிணி பொம்பளையை அடிச்சிட்டீங்க. நாளைக்கி தியேட்டர் எரிக்கிறேன், பேனர் எரிக்கிறேன், பேர்வழின்னு 10 குடிசை 10 பஸ் எரிப்பீங்க. பண்றதெல்லாம் பண்ணிட்டு நீ தான் பண்ணே, நீ தான் பண்ணேனு சின்ன புள்ள தனமா அறிக்கை விட்டு ஊரை ஏமாத்துவீங்க. உங்களுக்கு விஜயகாந்த் மேல கோவமா அவரை திட்டுங்க, அவன் மட்டும் ரொம்ப ஒழுங்கா? தமிழனானு கேள்வி கேட்டு வசைமாறி திட்டுங்க. விஜயகாந்தும் உங்களை திருப்பி திட்டட்டும். நேருக்கு நேர் பார்த்து முறைச்சிக்கங்க. ஏன்யா எங்களை படுத்துறீங்க.

இன்னைக்கி அடிச்சிகுவீங்க, நாளைக்கு விஜயகாந்த் ஒரு கட்சி ஆரம்பிச்சி, அது 10 சீட் வாங்கி, உங்க கூட்டணி தலைவர் உங்க வேட்டியை உருவி துரத்தி விட்டா.. எல்லாத்தையும் மறந்து, தங்க கம்பி தம்பி விஜயகாந்த், அப்படின்னு சேர்ந்துகுவீங்க..

போதும் அய்யா, போதும், உங்க தனிமனித பிரச்சினையை உங்க கூடவே வச்சிக்கங்க. எங்களை எல்லாம் நிம்மதியா வாழ விடுங்க...

அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்துடன்
அப்பாவி தமிழன் ஒருவன்.

0 Comments:

Post a Comment

<< Home