தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Friday, June 18, 2004

அறிமுகம்

அன்புள்ள அனைவருக்கும் வணக்கம். நான் வலைபதிவிற்க்கு புதுமுகம். என் பெயர் தான் இந்த வலைப்பதிவின் பெயரும். இந்த வலைபதிவின் பெயருக்கும் நான் எழுத போவதற்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை இப்பொழுதே தெரிவித்து விடுகிறேன். ஏன் என்றால் என் பெயருக்கும் எனக்குமே சம்மந்தம் இல்லாத போது எப்படி வலைபதிவின் தலைப்புக்கு நான் சம்மந்தப் பட முடியும். :-)

தமிழில் பதிப்பதால் நான் தமிழன் என்று யாரும் நினைக்க வேண்டாம். நான் பிறப்பால் தமிழன் அல்ல. "வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்" என் மூதாதரை வாழ வைத்தது. அப்படியே நானும் வாழ்கிறேன்.

என் பிழைகளை அனைவரும் பொறுத்தருள வேண்டுகிறேன். தவறுகளை திருத்திக் கொள்ள வாய்ப்பளியுங்கள். நன்றி.

என் தாய்மொழி, என்னுடைய பிற அடையாளங்களை இப்பொழுது சொல்லிக் கொள்ள விரும்பவில்லை. அப்படியே சொன்னாலும் யாருக்கும் தெரியப் போவது இல்லை. இது தான் உண்மை.

எதை பற்றி எழுதுவது என்று முடிவு செய்து விட்டேன். நாளை பார்ப்போம்.

0 Comments:

Post a Comment

<< Home