தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Friday, June 18, 2004

கண்ணன் - இயேசு - நபி

மஞ்சள், குங்குமம் - ஒன்றும் இல்லை தமிழர் வழக்கப்படி நானும் மங்களகரமாக என் வலைபதிவை ஆரம்பிக்கிறேன். நீண்ட ஆயுளுடன் வாழ நான் என் வலைபதிவை ஆசிர்வதிக்கிறேன்.

எனக்கு எம்மதமும் சம்மதம் என்பதில் உடன்பாடு உண்டு. பிறந்தது இந்து மதம் என்றாலும், படித்தது எல்லாம் கிறிஸ்தவ பள்ளியில் தான்.சின்ன வயதில் பக்தி பாடல்கள், பக்தி கதைகள் நிறைய படிப்பேன். கொஞ்சம் வளர்ந்த பிறகு நாத்திகம் சார்ந்த புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன். அது படிக்க சுவாரசியமாய் இருந்தது. மற்ற படி மனதில் ஒட்டவில்லை. ஒருமுறை நான் படித்த பள்ளியில் மத பிரச்சாரம் நடந்தது. மத போதகர் பல பாடல்களை பாடி எங்களை உற்சாகப் படுத்தினார். எல்லாம் முடிந்த பிறகு எங்களை பார்த்து "பிள்ளைகளே, உங்களுக்கு இயேசுவின் பால் பிரியம் உண்டாகட்டும், உங்களுக்கு ஏதேனும் கேள்வி கேட்க வேண்டுமென்றால் கேளுங்கள்" என்றார். வழக்கம் போல் எல்லாரும் அமைதியாய் இருந்தனர். நான் அப்பாவியாய் எழுந்து நின்றேன். என் வகுப்பாசிரியர் ஆச்சரியமாய் பார்த்தார். அவர் பார்த்ததிலும் அர்த்தம் இருந்தது. வகுப்பில் ஒரு முறை கூட எழுந்து எந்த சந்தேகமும் கேட்டதில்லை நான். அப்படிப் பட்ட நான் என்ன கேட்கப் போகிறேனோ என்று ஆவலாய் பார்த்தார்.

உள்ளுக்குள் பயமாய் இருந்தாலும் கேட்டே ஆக வேண்டும் என்று கேட்டேன்.
" நான் கேட்கிறேன் என்று திட்டாதீர்கள். பைபிளில் இயேசு சொல்கிறார் - நான் இறைவனின் மைந்தன் என்று, குரானில் நபிகள் சொல்கிறார் - நான் இறைவனின் தூதுவன் என்று.. ஆனால் பகவத்கீதையில் கண்ணன் சொல்கிறார் - நானே கடவுள் என்று. அப்படியானால் இயேசு கண்ணனின் மைந்தன், நபிகள் கண்ணனின் தூதுவன் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?"

இந்த நேரம் பார்த்து தான் பள்ளி மணி அடித்தது. பதில் சொல்லாமல் அவர் போய் விட்டார். என் வகுப்பு ஆசிரியர் என்னை பார்த்த பார்வைக்கு விடை நான் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் முட்டைக்கு வெகு பக்கத்து இலக்கங்களை வாங்கிய பொழுது தான் தெரிந்தது.

அதற்கு பிறகு பள்ளி முடிக்கும் வரை "இயேசுவின் நாமம் இனிதான நாமம்.." என்று பாடிக் கொண்டிருந்தேன்

2 Comments:

  • At Sun Jun 20, 07:57:00 PM EDT, Anonymous Anonymous said…

    Do you think Religion is necessary to believe in God?
    Is God not just an abstration, an explanation for the mystry of our existence?

     
  • At Mon Jun 21, 04:37:00 AM EDT, Blogger Gyanadevan said…

    I am not criticising any religion. This incident happened when I was 12 :-), you cannot expect maturity in that age.

     

Post a Comment

<< Home