தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Tuesday, June 22, 2004

இது நடக்கக் கூடாதது

விஜயகாந்த் ரசிகர்களுக்கும், ராமதாஸ் தொண்டர்களுக்கும் நடுவில் இப்போது ஏகப்பட்ட பிரச்சினைகள். இரு தரப்பும் மாறி மாறி கொடும்பாவி கொளுத்திக் கொள்கிறார்கள். ரசிகர் மன்றங்கள் எரிக்கப் படுகின்றன. கொடிமரங்கள் சாய்க்கப் படுகின்றன. இது இப்படியே தொடர்ந்தால்....
விஜயகாந்த் : என்னை தொல்லை படுத்தும் யாரும் நிம்மதியாக இருக்க முடியாது. இருக்கவும் விட மாட்டேன். யாரும் யாரையும் இங்கே வராதே அங்கே வராதேன்னு தடுக்க முடியாது. அப்படி தடுத்தா .. தாண்டி வருவேன். ஆட்சியில் இருப்பதால ஆட கூடாது, எப்பவும் ஆடிகிட்டே இருக்கவும் முடியாது. நான் யாரையும் அழிக்க நினைக்கல, அழிக்க நினைச்சா அழிச்சிடுவேன். நான் வரணும்னு நினைச்சா உடனே வந்துடுவேன். நான் வந்துட்டா இப்போ ஆடுற எல்லாரோட ஆட்டத்தையும் அடக்கிடுவேன். அப்புறம் மக்கள் சக்தி உங்களை விழுங்கிடும்.
டைரக்டர்: கட் கட் கட்
விஜயகாந்தின் அருகில் வந்து "சூப்பர் சார். கலக்கிட்டீங்க, தியேட்டர் அதிரும் இந்த சீனுக்கு.."
வெள்ளித்திரையின் முன்னால் "தலைவா.. வா ... வா தலைவா" இருட்டைப் பார்த்து "டேய் பாருங்கடா, தலைவர் வந்தா, நீங்க எல்லாம் காலிடா... ஓ..."
"எவண்டா அவன் எங்களை மிரட்டுறது?? வெளியே வாடா, வகுந்திடறோம்"
தலைப்புச் செய்திகள்: திண்டிவனத்தில் "மகேந்திரா" திரையிடப் பட்ட திரையரங்கில் கலவரம். 3 பேர் பலி, காவல்துறை துப்பாக்கி சூடு. 10 பேர் கைது.
ராமதாஸ் அறிக்கை: அரைவேக்காட்டு விஜயகாந்தின், அறிவுகெட்ட பேச்சால் அப்பாவி மக்கள் அடித்துக் கொண்டு இறக்கின்றனர். திரைப்படம் வன்முறையை தூண்டுகிறது என்று எவ்வளவு முறை சொல்லி இருக்கிறேன். இதோ மீண்டும் ஒருமுறை அது நிரூபணம் ஆகி இருக்கிறது. இனிமேலாவது, அர்த்தம் கெட்டதனமாய் பேசாமல் வாயை.... மூடிக் கொண்டு இருந்தால் விஜயகாந்துக்கு நல்லது. இல்லையேல் ரஜினிக்கு தமிழக மக்கள் செய்தது போல், முக்காடு போட்டு மூலையில் அல்ல முச்சந்தியில் நிறுத்தி விடுவார்கள் என்று எச்சரிக்கிறேன்...............

மீன்டும் இதே வலைப்பதிவில் நான்...
விஜயகாந்த் ரசிகர்களுக்கும், ராமதாஸ் தொண்டர்களுக்கும் நடுவில் இப்போது ஏகப்பட்ட பிரச்சினைகள். இரு தரப்பும் மாறி மாறி கொளுத்திக் கொள்கிறார்கள். ரசிகர் மன்றங்கள் எரிக்கப் படுகின்றன. தலைகள் சாய்க்கப் படுகின்றன. இது இப்படியே தொடர்ந்தால்....

0 Comments:

Post a Comment

<< Home