தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Sunday, June 27, 2004

ஜக்குபாய் இடைவேளைக்கு பிறகு !!!

இடைவேளைக்கு பிறகு

வாஷிங்டன்: தமிழ் சினிமா கலைஞர்கள் கலை நிகழ்ச்சி: மேடையிலே ரஜினி டான்ஸ். ஜோதிகாவும் கூட ஆடுறாங்க. புஷ் பார்த்துகிட்டு இருக்கார்.
"ஜக்குபாய்ய்ய் சினிமா சினிமா ..
ஜக்குபாய்ய்ய் நேரம் தான்...
வாழ்க்கை ஒரு வாட்டர் ஜக்கு
வாட்டர் தீரும்வரையில் தான்.
வாட்டர் தீர்ந்து போற மாதிரி
உயிரும் பறந்து போகும்தான்.."
பாட்டு முடியும் போது புஷ், ஒசாமா எதிரே இருந்தார். ரஜினி ஒசாமா வேசம் போட்டுகிட்டு கேஸ்ட் அனுப்புறார்.
"இன்னும் 1 மாசத்துல இந்தியாவில இருக்குற அத்தனை நதிகளும்
ஒண்ணாயிடனும், இல்லை புஷ்....(ஒரு விஷ் சவுண்ட் குடுத்து)
ரெண்டாயிடுவார். ஹா ஹா ஹா". ஆனா எதிர் பார்த்த மாதிரி யாரும் புஷ் காணோம்னு சொல்லி வருத்தப்படாம உலகமே சந்தோஷமா தீபாவளி கொண்டாடுது. அமெரிக்கா, ஒசாமாக்கு தேங்ஸ் சொல்லி கிரீட்டிங்ஸ் அனுப்புது. ரஜினி அப்படியே இமயமலைக்கு போய் பாபாவை பார்க்கிறார். பாபா, ஜக்குபாய்க்கு 3 வரம் தந்து ஊருக்கு அனுப்புறார். வரத்தை சோதிச்சி பார்க்க ஜோதிகா ஓடி வந்து முத்தம் தரணும்னு நினைக்கிறார். அதே மாதிரி ஜோதிகா ஓடி வந்து முத்தம் தர்றாங்க. அப்போ ஒரு டூயட் சாங்.
"ஜக்குபாய்... ஜொள்ளு முத்தம் தா..
அது வற்றா நதி ஆகுதான்னு பார்ப்போம் வா.."
பாட்டு முடியும் போது போலிஸ் வந்து திருப்பி பிடிச்சிடறாங்க. ஜாமீன் முடிஞ்சி போச்சு, ஆத்துல பள்ளம் வெட்டி தண்ணியை திருடினதா குற்றம் நிரூபிச்சி 1 வருஷம் தண்டனை குடுத்துடறாங்க. இதுக்கு நடுவுல இண்டர்போல் போலிஸ் வந்து ரஜினிக்கு உடந்தையா இருந்ததா சொல்லி ஜோதிகாவை தூக்கிட்டு போய்டுறாங்க. வேற வழியில்லாம 2வது வரம் பிரயோகிச்சி ஜெயிலை விட்டு தப்பிச்சி வந்து, ஜோதிகாவை காப்பாத்தி கல்யாணம் பண்ணிக்கிறார். ஜெயிலே இருந்து தப்பிச்ச குற்றத்திற்காக அவருக்கு 15 வருஷம் தண்டனை அதிகம் பண்ணிடறாங்க. 15 வருஷம் கழிச்சி வெளியே வர்றார். நாடே பாலைவனமா கிடக்குது. ஜெயில் வாசல்லே ஜோதிகா காஞ்சி போன மரம் மாதிரி கிடக்குறாங்க. ரஜினி வந்ததும் அவர் காலை பிடிச்சி நீங்க தான் எல்லாரையும் காப்பாத்தனும்னு கதறுறாங்க. போன தடவை மாதிரி இந்த தடவையும் மக்கள் கூட்டம் ஜெயில் வாசல்லே நின்னுகிட்டு "ஜக்குபாய் ஜக்குபாய்"னு கோஷம் போடுறாங்க. ரஜினி மேல பார்க்குறார். அங்கே பாபா "குழந்தாய் ஜக்கு இன்னும் 1 வரம் மிச்சம் இருக்கிறது, உபயோகி"ன்னு சொல்லிட்டு மறைஞ்சிடுறார்.
ஜக்குபாய் வலது கை எடுத்து தரையிலே வச்சி எடுக்கிறார்.. தண்ணி பீய்ச்சி அடிக்குது..
"ஓ ஓ ஓ தண்ணி ஊறுதே..
உள்ளுக்குள்ளே ஈரம் ஆகுதே..
அட கம்பஞ்சோரு தின்னவும் தண்ணி வேணும்
அட தங்க பஸ்பம் செய்யவும் தண்ணி வேணும்..."

பாட்டு முடியும் போது, மக்கள் எல்லாரும் அவரை தோள் மேல தூக்கி வச்சிகிட்டு இருக்காங்க.. கேமிரா பார்த்து சிரிக்கிறார்..
வணக்கம் போடுறாங்க.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : கே.எஸ்.ரவிகுமார்
இசை : இசை புயல் ஏ ஆர் ரகுமான்
பாடல்கள் : வைரமுத்து
தயாரிப்பு : சத்யநாராயணா

நான் ஜக்குபாய் கதை சொல்லிட்டேன்னு தியேட்டர் போய் பார்க்காம இருந்துடாதீங்க.. கட்டாயம் போய் பாருங்க.. ராமதாஸ் துணை இருப்பார்.

0 Comments:

Post a Comment

<< Home