தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Saturday, June 26, 2004

ஜக்குபாய் கதை (???)

ஜக்குபாய் கதை என்னான்னு தெரியாம தமிழ்நாடு ஸ்தம்பிச்சி போய் இருக்கு. பத்திரிக்கைகள் எல்லாம் என்ன எழுதுறதுன்னு தெரியாம பேய் முழி முழிச்சிகிட்டு இருக்காங்க. யாருக்கும் சாப்பிட பிடிக்கல தூங்க பிடிக்கல மொத்ததுல வாழ்க்கையே பிடிக்கல. இதை இப்படியே விட்டுட கூடாதுன்னு சொல்லி 007 கிட்ட மேட்டரை சொன்னேன். கே.எஸ்.ரவிகுமாரை எப்படியோ ஏமாத்தி அவர் வச்சி இருந்த ஸ்டோரியை அப்படியே சுட்டு வந்து குடுத்துட்டார். கதை நான் சொல்லிடறேன், ஆனா நீங்க யாரும் கே.எஸ்.ரவிகுமார் கிட்ட போட்டு குடுத்திடாதீங்க ப்ளீஸ்..

ரஜினி அவர் நண்பர்கள் ரமேஷ் கண்ணா, செந்தில் இன்னும் 4 பேர் மைசூருக்கு டூர் போறாங்க. அப்போ ரஜினியின் நண்பருக்கு தாகம் எடுக்குது. ஒரு வீட்டு கதவை தட்டி தண்ணி கேட்குறார். அவங்க தமிழர்களுக்கு ஒரு சொட்டு தண்ணியும் தரமுடியாதுனு சொல்லி வெளியே துரத்திடறாங்க. தாகம் தாங்க முடியாம நண்பர் மயக்கம் போட்டுறார். ரஜினி அவரை 2 கையிலே தூக்கிகிட்டு நடக்குறார். அப்படியே அங்கே ஒரு பாட்டு
"தண்ணி குடு.. தண்ணி குடு.."
(பாபா பட "சக்தி கொடு" மெட்டு இசை நம்ம ரகுமான் தானே :-) )
பாட்டோட முடிவுல ஒரு பெட்டி கடைக்கு போய் கோக் வாங்கி குடிக்க வைக்கிறார். அய்யோ பாவம், பூச்சிகொல்லி மருந்து அதிகமா போய் நண்பர் இறந்துடறார்.அப்போ கோக் தொழிற்சாலை போய் நியாயம் கேட்கிறார். அங்கே அற்புதமா ஒரு பைட். ஒரு கோக் பாட்டில் எடுத்து சுத்தி விடுறார். அதுலே இருந்து தெரிக்கிற ஒவ்வொரு சொட்டும் ஒரு அடியாள் வாயிலே விழுந்து எல்லாரும் மயக்கம் ஆயிடறாங்க. பைட் முடிஞ்சி எல்லாரும் தமிழ்நாட்டுக்கு வந்துடறாங்க. நண்பரை நினைச்சி அழுறார். அப்போ பாபா கனவுலே வந்து, இந்த துன்பத்துக்கு காரணம் நதிகள் எல்லாம் பிரிஞ்சி இருக்குறது தான், நீ தான் அதை எல்லாம் சேர்த்து வைக்க முயற்சி செய்யணும்னு சொல்லிட்டு மறைஞ்சிடறார். அடுத்த நாள் விடிஞ்சதும் ஒரு கடப்பாறை எடுத்துகிட்டு ஆத்தோரம் போய் ஒரு கொத்து கொத்துறார், தண்ணி பீய்ச்சி அடிக்குது. அப்போ ஒரு பாட்டு
" வெற்றி கொடி கட்டு..
நதிகளை இணைத்து நீ கட்டு..
நரிகளை தீர்த்து நீ கட்டு..
எங்கள் ஜக்குபாய்.."
பாட்டு முடியும் போது போலிஸ் வந்து கைது பண்ணிடுது, அனுமதி இல்லாம பொது சொத்துக்களை நாசம் பண்ணினார்னு ஜெயில்ல போட்டுடறாங்க.

அப்போ தான் ஹீரோயின் வக்கீலம்மா ஜோதிகா வர்றாங்க, ரஜினி பக்கம் நியாயம் இருக்குனு வாதாடுறாங்க. எப்படியோ ஜாமீன்ல ரஜினி வெளியே வர்றார், கோர்ட் வாசலே இருந்து கண்ணுக்கெட்டின தூரம் வரை மக்கள் வெள்ளம். ரஜினி கண்ணுல தண்ணி வருது.. அப்போ சோகமா
"தண்ணியில்லாஆஆஅ இந்த வாழ்கை...
தருபவன் தான் யாரோ..
வானில் ஒளிந்துள்ள மழை துளிகள்..
வந்து விழுகின்ற நாள் எதுவோ..
பிரிந்து கிடக்கின்ற நதிகள் எல்லாம்,
பின்னி பிணைகின்ற நாள் எதுவோ??"

பாட்டு முடியும் போது, ரஜினி விமானம் ஏறி டில்லி போறார். அப்போ அந்த விமானத்தை அல்-கொய்தா தீவிரவாதிகள் கடத்திடறாங்க. ரஜினி ஒசாமாவை(ரகுவரன்) மீட் பண்றார்.. "வாங்க பாய்.. ஜக்கு பாய்.. எப்படி இருக்கீங்க.. நீங்க தமிழ் நாட்டு மக்களுக்கு தண்ணி காட்டணும்னு சொன்னீங்களாம், அதான் என் பசங்களை அனுப்பி கூட்டி வர சொன்னேன். நான் தான் அமெரிக்காவுக்கே தண்ணி காட்டிகிட்டு இருக்கேனே, நான் சொல்லி தர்ரேன் டோண்ட் வொரி"
ரஜினி : இல்ல பின்லேடன் ஜி, எனக்கு நிஜ தண்ணி வேண்டும்.. நதிகள் இணையனும்.. வழி சொல்லுங்க
பின்லேடன் : நதிகள் இணைக்க நிறைய பணம் வேண்டும், அது புஷ் கிட்டே தான் இருக்கு, அவனை என்னாலே கடத்த முடியல, நீங்கதான் செய்யணும்..
ரஜினி கண் சிவக்குது.. ஒசாமா மாதிரி மாறிடறார்.
"ஒசாமா சொல்றான் ஜக்குபாய் முடிக்கிறான்"
இடைவேளை விடுறாங்கோ

1 Comments:

Post a Comment

<< Home