தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Monday, June 28, 2004

அஹிம்சாவாதி அய்யா

டாக்டர் அய்யா சொல்லிட்டார், விஜயகாந்த் கூட பிரச்சினை வேண்டாம்னு. இப்போ அவர் பெரிய மனுஷன் ஆயிட்டார். சண்டையை விரும்பாத அஹிம்சாவாதி ஆயிட்டார். திரை துறை சங்கங்கள் எல்லாம் கேட்டுக் கொண்டதால் இந்த விவகாரத்துக்கு முற்று புள்ளி வச்சிட்டதா சொல்லி இருக்கார். ரொம்ப சந்தோசம். எனக்கு என்னமோ இந்த அமைதி ஒரு நடிப்பு மாதிரி தான் தெரியுது. நல்லது நடந்தா பிடிக்காதா எனக்குன்னு கேட்காதீங்க, சில காரணம் இருக்கு.

- திரை துறை சங்கங்கள் வேண்டுகோள் விடுத்து 5 நாளைக்கு மேல ஆயிடிச்சி. இப்போ தான் சாவகாசமா அய்யாவுக்கு அதை பரிசீலனை செய்ய முடிஞ்சிதா?
- விவகாரத்துக்கு முற்று புள்ளி வைக்க காரணம் என்ன சொல்லி இருக்காங்க படிச்சீங்களா? மக்கள் பிரச்சினைகளை கவனிக்கனுமாம் :-( அடப்பாவிகளா இவ்ளோ நாளா ரஜினிகாந்த், விஜயகாந்த் பிரச்சினை மட்டும் கவனிச்சீங்களா?
- 2 நாள் முன்னாடி ஒரு கல்யாணத்துல பேசுறார், பஸ் கண்டக்டர் எப்படி இவ்வளவு சொத்து சேர்த்தார்?.. சாராயம் வித்தவங்க எப்படி கல்வி நிறுவனம் நடத்துறாங்க??..

இதையெல்லாம் பார்த்தா ஏதோ ஒரு திட்டத்தோட தான் முற்று புள்ளி வைக்கிறார்னு தோணுது. இல்லாட்டி விவகாரம் இவ்ளோ சூடு பிடிக்கும் வரை காத்திருந்து, முடிஞ்சவரை இவரும் அதில் பெட்ரோல் ஊத்தி வளர்த்துட்டு, பொசுக்குன்னு பின் வாங்குறார்னா.. நம்ப முடியவில்லை...

என்னோட இந்த அதீத கற்பனை - கற்பனையாவே போயிடனும்.

அடுத்து விஜயகாந்துக்கும் இருக்கு....

0 Comments:

Post a Comment

<< Home