தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Friday, July 09, 2004

சின்ன மீன் - பெரிய குழி

ஞானம் ஒரு நாள் தோட்டத்தில் உட்கார்ந்து அழுதுக் கொண்டிருந்தான். கையில் ஒரு சிறிய கடப்பாறை இருந்தது. அதை வைத்து கொத்தி கொத்தி குழி வெட்டிக் கொண்டிருந்தான். பக்கத்து வீட்டுக்காரருக்கோ ஒரே ஆச்சரியம். ஞானத்துக்கு என்ன ஆச்சு? என்று யோசித்துக்கொண்டே வந்து, மெதுவாக அவன் முதுகில் கை வைத்தார். ஞானம் திரும்பி பார்த்தான். அவன் கண்கள் சிவந்து இருந்தது. அழுகையும் பலம் ஆகியது.
"என்ன ஆச்சு ஞானம் ஏன் அழுவுற சொல்லு"
"என்னோட தங்க மீன் செத்துப் போச்சு சார்..."என்றான் விசும்பலுடன்
"அதுக்காக??? "
"அதுக்காக தான் நான் குழி வெட்டுறேன். புதைக்கிறதுக்கு" என்று சொல்லி அழுகையை தொடர்ந்தான்.
பக்கத்து வீட்டுக்காரர் குழியை பார்த்து விட்டு, மெதுவாக கேட்டார்
"சின்ன மீன் தானே அது, எதுக்கு 2 அடி அகலம், 2 அடி ஆழத்துக்கு குழி வெட்டிகிட்டு இருக்கே??"
ஞானம் திரும்பி பார்த்து...சொன்னான்..
"உங்க வீட்டு பூனை தான் என் மீனை சாப்பிட்டது, அடிச்சி கொன்னுட்டேன். அதுக்கு தான் பெரிய குழி"

0 Comments:

Post a Comment

<< Home