தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Wednesday, July 07, 2004

ஹைடெக் நரகம்

மிக சிறந்த அறிவாளியான ஒரு எஞ்சினியர் இறந்து போனான். தவறுதலாக அவனை சொர்க்கத்துக்கு அனுப்புவதற்க்கு பதிலாக நரகத்துக்கு அனுப்பி விட்டார்கள். நரகத்திற்கு சென்ற அவன், அங்கே இருந்த வசதி குறைவுகளை கண்டு நொந்து போனான். தலைமை சைத்தானிடம் பேசி, கொஞ்சம் கொஞ்சமாக நரகத்தை மாற்றினான். எல்லா அறைகளும் குளிரூட்டப்பட்டன, தொலைபேசி இணைப்பு தரப்பட்டது, குளியல் தொட்டி முதல் இணையம் வரை அனைத்து வசதிகளும் செய்யப்பட்டது. நரகம் முற்றிலும் மாறி ஒரு ஹைடெக் நகரமாக மாறியது.

ஒருநாள் சொர்க்கத்தில் இருந்து தலைமை சாத்தானுக்கு கடிதம் வந்தது.
"தவறுதலாக நரகத்திற்க்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்த எஞ்சினியரை உடனடியாக சொர்க்கத்துக்கு அனுப்பி வைக்கவும்"
சாத்தானுக்கு கோபம் வந்து "எங்களால் அவரை அனுப்பி வைக்க முடியாது" என்று பதில் அனுப்பினார்.
அடுத்த நாளே சொர்க்கத்தில் இருந்து போன்
"ஹலோ சாத்தான், உடனே அவரை அனுப்பு, இல்லை இந்திரன் கோர்ட்டில் வழக்கு போட்டு விடுவோம்" என்று மிரட்டினர்.
அதற்கு சாத்தான் சிரி சிரி என்று சிரித்தான்.
" என்ன சாத்தான் சிரிக்கிறாய், கோர்ட்டுக்கு போனால் நீ தோற்று விடுவாய், மறந்து விடாதே" என்று மேலும் மிரட்டினர்.
சிரிப்பை நிறுத்திவிட்டு சாத்தான் சொன்னது
" அட முட்டாள் பசங்களா, நீங்க வக்கீலுக்கு எங்க போவீங்க?? எல்லாரும் இங்கே தானே இருக்காங்க"
என்று சொல்லிவிட்டு சிரிப்பதை தொடர்ந்தது..

0 Comments:

Post a Comment

<< Home