தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Thursday, July 22, 2004

கரப்பான் பூச்சி - சுண்டெலி

நம்மூர் கரப்பான் பூச்சி போட்ட கூல்டிரிங்ஸ் கதை எல்லாருக்கும் தெரியும். எலி விழுந்த பீர் கதை தெரியுமா?? இது நடந்தது பெரியண்ணன் ஊருல (அதாம்பா அமெரிக்கா!!) ராண்டி ஏஞ்சலின்'னு ஒரு ஜட்ஜய்யா. மிசோரி'ல இருக்குற ஹோலிஸ்டர் ஊருல வேலை பார்க்குறாங்க. ஒருநாள் வேலை முடிச்சிட்டு வீட்டுக்கு வந்து "மில்லர்" ப்ராண்ட் பீர் குடிச்சி இருக்காங்க. அது தீர்ந்ததும் தூக்கி போட பார்த்தாங்க, உள்ளே ஏதோ இருக்குற மாதிரி தெரிஞ்சதும் அது என்னான்னு பார்த்து இருக்காங்க. செத்துப் போன சுண்டெலி அவங்க கண்ணுல பட்டு இருக்கு, உடனே கத்தி, கூச்சல் போட்டு அமர்க்களம் பண்ணிட்டாங்க. இதுக்கு நிவாரணம் தரணும்'னு இப்போ கேஸ் போட்டு இருக்காங்களாம்.
( இவங்களையே இந்த கேஸை விசாரிக்க சொல்லிட்டா... உடனே தீர்ப்பு வந்துடாது??)

பெய்ஜிங்(சீனா) ஊருல ஒரு சம்பவம். பொண்டாட்டி இறந்த துக்கத்துல ஒரு ஆள், கரப்பான் பூச்சி வளர்க்க ஆரம்பிச்சிட்டாராம். பக்கத்து வீட்டுக்காரனுக்கு நாத்தம் தாங்க முடியாம போலிஸ்க்கு போயிட்டார். போலிஸ் வந்து வீட்டை பார்த்தா.. பயந்துட்டாங்களாம். வீடெல்லாம் கால் வைக்க முடியாத அளவுக்கு கரப்பான் பூச்சிகளாம். எண்ணி பார்த்தா கிட்டதட்ட 200,000 ( 2 லட்சம்) இருந்ததாம். ஹெல்த் ஆபிசர்ஸ் வந்து  சுமாரா 2 மணி நேரம் போராடி, அத்தனை பூச்சிகளையும் கொன்னு, வீட்டையும் க்ளீன் பண்ணி குடுத்தாங்களாம்.
 
(சீனாகாரங்க கரப்பான் பூச்சி சாப்பிடமட்டாங்களா? ஏன் கொன்னாங்க? )

0 Comments:

Post a Comment

<< Home