தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Friday, July 16, 2004

வெந்ததை பெற்றவளே!!

வெந்ததை பெற்றவளே!!
உனக்கில்லை ஆறுதல்!!
மார்பில் அடித்துக்கொள்!
தலையை முட்டிக்கொள்!
ரத்தம் வெளியேற அழுவு!
சித்த பிரமையில் சிலையாகு!
நெஞ்சம் வெடிக்க குமுறு!
மண்வாரி இறைத்து தூற்று!
மனமாற வசை பாடு!
எச்சில் வற்ற துப்பு!
கல்நெஞ்சம் எனக்கில்லை.
உனக்கு ஆறுதல் சொல்ல !!
நீ மயங்கி வீழும் போது
என் கனத்த மார்பில் தாங்குகிறேன்
இல்லை
என் மடியில் தாங்குகிறேன்
சேர்ந்து நானும் அழுகிறேன்!!

0 Comments:

Post a Comment

<< Home