தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Sunday, July 25, 2004

கதவை மூடு - பகுதி 2

ஆனந்த் தொடர்கிறான்..
"உங்க கிட்ட சொல்லிட்டு நான் நைட் ஷோ முல்லைக்கு கிளம்பினேன். ஆட்டோலே தான் போனேன். அது ஒரு ஹிந்தி படம். பேர் 'தர்வாஜா பந்த் கரோ'. அதாவது கதவை மூடு - சாத்துன்னு கூட வச்சிக்கலாம். பேர் பாத்ததும் எனக்கு ஒரே கிளுகிளுப்பாய் போச்சு.. செம படம் போல இருக்கு, பேரே ரொம்ப செக்ஸியா வச்சு இருக்கான்னு குஷியா பர்ஸ்ட் க்ளாஸ் டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனேன். நைட் ஷோ, அதுனால கூட்டம் கம்மியா தான் இருந்திச்சி. பர்ஸ்ட் க்ளாஸ்லே மருந்துக்கு கூட யாரும் இல்லே. எனக்கு ரொம்ப சந்தோஷம் ஆயிடிச்சி. தனியா தியேட்டர்ல உட்கார்ந்து செக்ஸ் படம் பார்க்குற பாக்கியம் எனக்கு தான் கிடைச்சி இருக்குன்னு பெருமை பட்டுகிட்டேன். சரியா 10 மணிக்கு படம் ஆரம்பிச்சான். ஒரே கும்மிருட்டு, என் கையே எனக்கு தெரியல அப்படி ஒரு இருட்டு, ஸ்கிரீன்லயும் ரொம்ப வெளிச்சம் இல்ல. நான் பிட் ஸீனுக்கு ரொம்ப ஆவலா காத்திருந்தேன்...." என்று சொல்லி நிறுத்தினான்...
"மேல சொல்லுடா.. அப்புறம் என்ன ஆச்சு.. " என்றேன் ஆர்வம் தாங்காமல்..
" நான் நினைச்ச மாதிரி படம் போகலேடா மச்சி.. அப்போ ஸ்கிரீன்ல ஒரு திகில் சீன்.. பேய் ஒண்ணு பின்னாடியே வர்ற மாதிரி.. சுத்தி இருட்டு.. ஒண்ணும் தெரியலே.. பேய் ஒரு ஆள் தோளை தொடுது. அதே நேரம்.. அதே நேரம்..."
மீண்டும் நிறுத்தினான்.
"அதே நேரம்.. என்ன ஆச்சு...?????"
" அதே நேரம், ஒரு புறம்போக்கு நாய்...(பல்லை கடித்து கொண்டான்) என் தோளை தொட்டு, - சார் படம் போட்டு எவ்வளோ நேரம் ஆச்சுன்னு கேட்டான்.. மனுசனாடா அவன்.. கால நேரம் தெரியாம, அந்த இருட்டுல என்கிட்ட வந்து இந்த கேள்வியை கேட்பானாடா? நானே பயந்து நடுங்கி போய் உட்கார்ந்து இருந்தேன். உங்களுக்கே தெரியும் நான் பேய் படம் எல்லாம் பார்க்க மாட்டேன்னு.. அந்த ஆள் என் தோளை தொட, நான் படத்துல இருக்குற பேய் தான் வந்துடிசின்னு நினைச்சி பயந்து ஓ'ன்னு கத்தி கலவரப்பட்டுப் எந்திரிச்சி ஓடி போனேன். ரூமுக்கு வந்துடலாம்னு கதவை தொறக்கப் பார்த்தேன். அதுவும் பூட்டி இருந்தது.. எனக்கு பயம். சரி எப்படியும் இண்டெர்வெல் சமயம் தொறந்து விடுவாங்கன்னு கதவுக்கு பக்கமாவே உட்கார்ந்தேன். படம் கொஞ்சம் நஞ்சம் திகில் இல்லேடா.. கண்ணை மூடிகிட்டாலும் ஸ்பீக்கர்லே வர்ற வசனம், எபெக்ட் எல்லாம் என்னை ரொம்ப படுத்திடிச்சி. படம் பார்க்கவும் முடியாம, ஓடவும் முடியாமா.. அவஸ்தை பட்டேன். ஒரு நிமிஷம் கூட அந்த படத்துல வெளிச்சம் வரலேடா.. அப்படி ஒரு இருட்டு திகில்... திகில் திகில்...."
"சரிடா.. இடைவேளை விட்டப்போ கதவை தொறந்தாங்க தானே?" என்றேன்.
"அந்த கதை ஏன் கேட்குற, பயத்துல நான் தப்பான கதவை தொறக்கப் பார்த்து இருக்கேன். இடைவேளை விட்டதும், இன்னொரு கதவு தொறந்து இருந்தது, நானும் வெளியே வந்து பார்த்தேன்.. என் நேரத்தை பாரு.. அந்நேரம் கரண்ட் கட்.. முல்லை இருக்குற ஏரியா தான் தெரியும்லே.. ஆள் நடமாட்டமே இருக்காது.. படம் விடும் போது தான் ஆட்டோகாரங்க வருவாங்க. ஏற்கனவே பயத்துல இருக்குற எனக்கு வெளியே போக மனசு வரலே.. வராந்தாவுல உட்கார தியேட்டர்காரங்க விடல.. கடைசிலே முழு படமும் பார்த்துட்டு பயம் உறைஞ்சி போய் ரூமுக்கு வந்து படுத்தேன்.. காய்ச்சல் வந்து.. டாக்டர்கிட்ட போய்.. ஊசி போட்டுகிட்டு.. இப்போ பரவாயில்லே.. நாளைக்கு வந்துடுவேன் காலேஜுக்கு" என்று முடித்தான்.
(பி-கு) அவனுக்கு உடம்பு சரியாகவில்லை, எனவே கும்பகோணத்திற்கு நாங்கள் ட்ரெய்ன் ஏற்றி விட்டோம். 1 வாரத்திற்க்கு பின் தெளிவாக வந்தான். அதன் பின் அவன் முல்லைக்கு போகவே இல்லை :-)

0 Comments:

Post a Comment

<< Home