தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Saturday, July 24, 2004

அன்புள்ள அருண்...

ஆசிரியர்களை பார்த்து நான் பரிதாபப்படவில்லை. பல பேரின் உயிர் காக்கும் சந்தர்ப்பத்தில் கொஞ்சமும் பொறுப்பில்லாமல், குழந்தைகளை, அங்கேயே விட்டுவிட்டு, தன் உயிர் தான் பெரிதென்று ஓடி ஒளிந்த ஆசிரியர்களை(ஆசிரியர்கள் மட்டுமல்ல - சம்பந்தப்பட்ட அனைவரையும்), மன்னிக்க கூடாது. கட்டாயம் தண்டிக்க வேண்டும். அத்தனை குழந்தைகளின் சாவுக்கு தாங்களும் ஒரு காரணம் ஆகி விட்டோம் என்று அவர்கள் உணர வேண்டும். இதில் அவர்களை ஆறுதல் படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

சாகசம் செய்துதான் குழந்தைகளை காப்பற்றி இருக்க வேண்டிய அவசியம் இல்லை,(ஒரு வேளை, அந்த ஆசிரியர்களின் குழந்தை அங்கே படித்து கொண்டிருந்தால், இப்படி தான் தங்கள் உயிர் முக்கியம் என்று, குழந்தையை கருக விட்டு போவார்களா?) அவசரம், ஆபத்து என்று ஊரை கூட்டி இருக்கலாம். நான் கேள்வி பட்ட வரை, தீ பிடித்ததும், குழந்தைகளை வகுப்பிலே இருக்க சொல்லி விட்டு இவர்கள் மட்டும் ஓடி இருக்கின்றனர். ஒருவேளை உதவி கேட்டு வெளியே வந்து இருக்கலாம், தீ பெரிதாக பிடித்ததும்  ஒன்றும் செய்யத் தோன்றாமல் ஓடி இருக்கலாம். எங்கிருந்தோ வந்த ஒரு கொத்தனார், குழந்தைகளை காப்பாற்றும் போது இறந்து போய் இருக்கிறார். படிக்காத அவருக்கு இருந்த மனிதாபிமானம் கூட, சொல்லித்தரும் ஆசிரியர்களுக்கு இல்லாமல் போனது ஏன்? விபத்து நடந்த போது அருகில் இருந்து பள்ளியை பற்றி அதன் அமைப்பை பற்றி, சில ஆலோசனை சொல்லி இருக்கலாம் அல்லவா? "அய்யா குழந்தைங்க உள்ளே மாட்டிகிட்டங்கய்யா.. காப்பாத்துங்க " என்று கதற கூட முடியாமலா போகும்?? அப்படி அவர்கள் எவ்வளவு பெரிய தவறை தீ பிடிக்கும் போது செய்து இருந்தால், இப்படி ஓடி ஒளிந்திருப்பார்கள்.
நடந்த துயருக்கு எல்லாரும் தான் காரணம், ஆனால் சில உயிர்களையாவது காப்பாற்ற வாய்ப்பிருந்தும், அநியாயமாய் ..... போதும்.. இதற்கு மேல் வேண்டாம்.

0 Comments:

Post a Comment

<< Home