தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Thursday, July 29, 2004

இது :-) மட்டும்!

இது புன்னகைக்க மட்டும்!!!!
***
சேலத்தில் இருந்து தர்மபுரி சென்று கொண்டிருந்த பஸ்ஸின் பின்புறம் படித்தது
" அனைவருக்கும் ஆரம்ப கல்வியை அழிப்போம் "
***
திருச்சியில் ஒரு திரையரங்கில் திரையிடப்பட்ட வாசகம்(கி.பி. 1992 ல்)
" ணக்க "
"மீண்டும் வருக"
(பி-கு)அது வணக்கம் - 'வ' மற்றும் 'ம்' அழிந்திருந்தது
***
சேலம் - மாலை முரசு - தலைப்புச் செய்தி
" ராணுவம் வருகை - வீரப்பன் பிடிக்க"

(பி-கு) எனக்கு தேதி ஞாபகம் இல்லை.
***
உதவியாளருக்கும், அந்தரங்க உதவியாளருக்கும் என்ன வித்தியாசம்.
உதவியாளர் : "குட்மார்னிங் சார்" சொல்லுவார்
அந்தரங்க உதவியாளர் : "மார்னிங் ஆயிடிச்சி சார்"ன்னு சொல்லுவார்.
***
அது ஒரு அரசு அலுவலகம்.
" சப்தம் எழுப்பாதீர் " என்று எழுதப்பட்டு இருந்தது.
ஒரு குறும்பன் அதற்கு கீழே
" சப்தம் எழுப்பினால் தூக்கம் கலைந்து விடும்"
என்று எழுதி இருந்தான்.
***

0 Comments:

Post a Comment

<< Home