தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Friday, July 30, 2004

சுப்பு லட்சுமி டீச்சர் in 3rd standard - PART 1

மயக்கம் போட்டு விழுந்த சுப்பு லட்சுமி டீச்சர் ( பார்க்க "மழை மல்லிகை" ) , மயக்கம் தெளிஞ்சி நேரா தலைமை ஆசிரியர் கிட்ட போய்,
"சார் என்னால இந்த பசங்களுக்கு பாடம் சொல்லித்தர முடியாது. வேற வகுப்புக்கு மாத்துங்க"ன்னு கேட்டுகிட்டாங்களாம்.

தலைமை ஆசிரியரும் சரின்னு சொல்லிட்டு 3ம் வகுப்புக்கு அனுப்பி வச்சாரு. இப்போ 3ம் வகுப்புக்கு போலாமா?

"மை டியர் குட்டி பசங்களா, என் பேரு சுப்பு லட்சுமி, நான் தான் இனிமேல் உங்க க்ளாஸ் டீச்சர், உங்களுக்கு என்ன சந்தேகம் வந்தாலும், இல்லை, என்ன வேணும்னாலும் என்கிட்ட கேளுங்க. சரியா"
என்று சொல்லிவிட்டு அமர்ந்தார்.

குழந்தைகள் குசு குசு வென்று பேசிக்கொண்டன. அப்போது ஒரு சிறுவன் எழுந்தான்.

"டீச்சர்.. என் பேரு ஞானம், எனக்கு உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்" என்றான்.

"சொல்லு ஞானம் என்ன வேண்டும் உனக்கு. தைரியமா சொல்லு" என்றார் டீச்சர்.

"டீச்சர்.. எனக்கு இந்த 3ம் வகுப்பு தேவை இல்லை டீச்சர். எனக்கு இருக்குற அறிவுக்கு நான் 5ம் வகுப்பு படிக்கனும் டீச்சர். நீங்க தான் எப்படியாச்சும் என்னை 5ம் வகுப்புக்கு அனுப்பி வைக்கனும் டீச்சர்"ன்னு கேட்டான்.

இதென்னடா புது தலைவலின்னு டீச்சர் நினைச்சாங்க. அப்புறம் இவனை சமாதானம் பண்ணலாம்ன்னு
"5ம் வகுப்பு போக நிறைய தெரியணும் ஞானம், நீ 3ம் வகுப்புல நிறைய மார்க் எடு, நேரா 5ம் வகுப்புக்கு போக வைக்கிறேன்"ன்னு சொன்னார்.

"இப்படி தான் டீச்சர் 2ம் வகுப்புலேயும் சொன்னாங்க. நான் நிறைய மார்க் எடுத்தும் என்னை 4ம் வகுப்புக்கு மாத்தலே. அதுனாலே என்னை நீங்க உடனடியா 5ம் வகுப்புக்கு மாத்துங்க"ன்னு அடம் பிடிச்சான்.

டீச்சருக்கு குழப்பமா போயிடிச்சி
"சரி ஞானம், நீ எப்படி 5ம் வகுப்புக்கு போக தகுதியானவன்ன்னு நினைக்கிறே" என்று கேட்டார்.

" என் அக்கா 5ம் வகுப்பு தான் படிக்கிறா, நான் தான் அவளுக்கு தினமும் வீட்டுபாடம் செஞ்சிக் கொடுப்பேன். கணக்கு போட்டுக் காட்டுவேன். எல்லாம் நான் தான் சொல்லிக் கொடுப்பேன். இப்போ சொல்லுங்க டீச்சர், நான் 5ம் வகுப்பு போக தகுதி இருக்குறவன் தானா இல்லையா?" என்று பதிலளித்தான்.

டீச்சருக்கு அதற்கு மேல் தாங்க முடியவில்லை. நேராக தலைமை ஆசிரியரிடம் போனார்.

தொடரும்...

1 Comments:

Post a Comment

<< Home