தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Thursday, August 19, 2004

கேள்விகள்

மாங்காமணி எம்.பி.பி.எஸ் பதிவை படித்து விட்டு ஒரு நண்பர் எனக்கு இப்படி ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்.

"நன்றாக கிண்டலாக எழுதுகிறீர்கள். இப்படி எழுதுனா எவனாவது PMK காரன் பார்த்துட்டு இந்தியாலே இருந்தா ஆட்டோவோ, வெளிநாட்டில் இருந்தால் FBஈ கோ ஈ-மெயில் அனுப்பி எதுனா பிரச்சினை வந்துறாதா? எதுக்கு கேக்குறேன்னா .... நானும் கருணாநிதியை கிண்டல் பண்ணி ஒரு கவிதை போட்டுட்டு அப்புறம் எடுத்திட்டேன். என் கேள்வி என்னவென்றால், நாம் தான் இதை எழுதுகிறோம் என்று கண்டுபிடிக்க ஏதேனும் வழி இருக்கிறதா? Blogger மூலம், FBI'யானது நம் கணினியின் IP விலாசத்தை கண்டுபிடிக்க முடியாதா?"

எனக்கு தெரிந்து நம் கணினியின் விலாசத்தை சுலபமாக கண்டு பிடிக்க முடியும். அதை வைத்து எங்கிருந்து நாம் வலை பதிக்கிறோம் என்பதையும் கண்டுபிடிக்கலாம். ஆனால் PMK காரர்களின் மின்னஞ்சலை வைத்து மட்டும் FBI நம்மை பிடித்துவிடுவார்கள் என்பது முடியாத விஷயம் என்று நம்புகிறேன்.

எனக்கு என்ன தெரியவேண்டுமென்றால்,
- தமிழ்நாட்டில் இருந்தால் ஆட்டோ அனுப்புவார்களா? இப்படி யாராவது வலை பதிந்து பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா?

- வெளிநாட்டில் இருந்தால் FBI பிடிப்பார்களா? அப்படி யாரையாவது பிடித்திருக்கிறார்களா? (வேறு நாட்டில், வேறு பிரச்சினைக்காகவாகவும் இருக்கலாம்.)

இந்த கேள்விகளுக்கு உங்களில் யாருக்காவது பதில் தெரிந்தால் ஒரு வார்த்தை சொல்லுங்களேன்.

நன்றி

0 Comments:

Post a Comment

<< Home