தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Thursday, August 12, 2004

சில காதல்கள்

கி.பி.1980

முத்து அவன் காதலிக்கு காதல் கடிதம் எழுதுகிறான். அன்பே, உன் நினைவு என்னை கொல்கிறது. என்ன செய்து கொண்டிருக்கிறாய். நன்றாக சாப்பிடு. அப்போது தான் நல்ல தூக்கம் வரும். கனவு வரும். கனவில் நாம் காதலிக்கலாம். சொல்ல மறந்து விட்டேன். நீ அன்று போட்டு வந்திருந்த நீல நிற சேலை அற்புதம். அதையே நாளையும் கட்டிக்கொண்டு வா.. அன்பு முத்தங்களுடன்...முத்து..

(இதை எழுதிவிட்டு, அவன் தம்பி/தங்கை அல்லது அவளின் தம்பி/தங்கை அல்லது யாரோ ஒரு சின்ன பையன்/பையி?(பொண்ணு) மூலமாக அவன் தன் காதலியிடம் சேர்ப்பிக்கிறான்)

கி.பி.1990
முத்து அவன் காதலிக்கு தொலைபேசுகிறான்.

ஹாய் டார்லிங். என்ன பண்றே. சாப்பிடுறியா?? ஒழுங்கா சாப்பிடு. அப்போ தான் நல்லா தூங்க முடியும், நாமளும் கனவு பாட்டு பாடலாம். ... சீ சீ சொல்லாதேடி செல்ல குட்டி.. பேசு... என்ன வெட்கமா?... கனவு பாட்டுக்கேவா... ஆங் சொல்ல வந்ததை மறந்துட்டேன் பாரு... நாளைக்கு காலேஜ் வரும் போது ப்ளு சாரி கட்டிகிட்டு வா. அதுலே உன்னைப் பார்த்தா .... சொல்ல மாட்டேன்... இப்போவே சொல்லனுமா... ம்ஹூம்.. இப்போ இல்லே.. நீ கட்டிகிட்டு வா அப்போ சொல்லுறேன்.. சரியா.. ம்ம்ம்ம்ச்ச்ச்ச் ம்ம்ச்ச் ம்ம்ம்ச்ச்ச்... (முத்தச் சத்தம்).. சரி சரி வைக்கிறேன்... நாளைக்கு பார்ப்போம்... ம்ம்ச்ச்.(ரிஸீவர் வைக்கப்படுகிறது)

கி.பி.2003
முத்து அவன் காதலிக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புகிறான்.

ஆய்.என பண்ற.ஒழுங் சாப்டு.தூங்.நாளை காலேஜ்கு ப்ளு சாரிலே வா.சூடான அன்பு :-* முத்து


0 Comments:

Post a Comment

<< Home