தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Wednesday, August 04, 2004

இன்னும் சில நிமிடங்களில்.... - PART 2

தொடர்கிறது....

திடீரென என் தலையை இரு கைகள் பிடித்து திருப்பின, அதன் மென்மையில் என் கண்கள் சொக்கியது, தேனில் மட்டுமே 18 வருடங்களாக ஊறிக்கிடந்த, கெட்டி சர்க்கரைப்பாகில் இருந்து எடுத்த செர்ரி பழம் போன்ற இரு உதடுகள், என் உதடுடன் இணைந்தது, அதன் ஈரம், என்னுள் இதமாய் இறங்கியது. பைக் என் பிடியில் இருந்து தானே நழுவி தரையில் விழுந்து மீண்டும் அதன் உறக்கத்தை துவங்கியது.

கண்ணை திறக்காமலே அந்த உதடுகளின் சொந்தக்காரியின் இடையை கட்டிப் பிடித்தேன். சத்தியமாய் இது என் மீராவே தான். அவள் இடை, என் பைக் ஹேண்டில்பாரை விட சின்னதாயிற்றே, இன்னும் இறுக்கிப்பிடித்து அவள் உதடுகளில் ஒட்டிக் கொண்டேன். நிமிடங்கள் ஓடின.. இல்லை பறந்தது.. இல்லை மின்னலாய் மறைந்தது.. கண் விழித்து பார்த்தேன்.. நெருப்பு துண்டு வெகு பக்கமாய் தெரிந்தது.

விலகிப் போ டெர்மினேட்டரே.. சில விநாடிகள் கழித்தாவது வா என்று சபித்தேன்.. என் முனகலில் அவள் விழித்து தன் உதடுகளை என்னிடம் இருந்து பிரித்து எடுத்து..
"கண்ணா.. ஐ லவ் யூ" என்று சொல்லிவிட்டு, அடுத்த மைக்ரோ விநாடியில் மீண்டும் என் உதட்டில் ஒட்டிக் கொண்டாள்.

கண் சிமிட்ட நேரம் இல்லை, டெர்மினேட்டர் தன் மொத்த எடையையும், பூமியின் மீது இறக்கியது. பூமியே பெரிய அடுப்பாய் மாறி தகிக்க ஆரம்பித்தது. நானும் என் மீராவும் கட்டி அணைத்தப்படி சாம்பலாகி விட்டோம்.

மேலுலகம்.
சித்திர குப்தன் அலுவலக வாசல்:
நம்ம ஊர் அரசு அலுவலகம் போய், கச கசவென்று இருந்தது.. பின்னே எல்லாரும் ஒட்டு மொத்தமா வந்தா இப்படி தான் இருக்கும். நானும் மீராவும் கை கோர்த்துக் கொண்டு தான் நின்றிருந்தோம். முன்னே Q போய்க் கொண்டிருந்தது. எங்கள் முறை வந்தது. வயசான சித்திர குப்தன் இருந்தார். 2004ம் வருச மாடல் கம்ப்யூட்டர் ஒன்றை வைத்து இருந்தார். ஸ்கிரீனை பார்த்தேன். அது ஆரக்கிள் 10ஜி டேட்டா பேஸ்.

"உன் பேரு மீராவா" என்றார்.

"ம் " என்றேன் நான்.

என்னை பார்த்து விட்டு,

"உன்னிடம் கேட்கவில்லை.. நீ பேசாதே" என்று சொல்லிவிட்டு அவள் பக்கம் திரும்பினார்.

"உன் கடைசி ஆசை நிறைவேறிச்சா" என்றார்.

அவள் சிறிது வெட்கத்துடன்"ம்" என்றாள்

"நல்லது, நீ அந்தப்பக்கம் போ" என்றார்.

அவளும் சிறிது தள்ளிப் போய் நின்றாள்.

"உன் பேரு கண்ணன் சரியா" என்றார்.

"ம்" என்றேன்.

" உன் கடைசி ஆசை நிறைவேறிச்சா" என்றார்.

"ம் " என்றேன்.
நிமிர்ந்து பார்த்தார்

"பொய்" என்றார் அழுத்தமாய்

"இல்லை, உண்மை தான். நிறைவேறிச்சி" என்றேன்.

"மீண்டும் பொய்.. நீ அந்தப் பெண்ணிடம் உன் காதலை சொல்லப் புறப்பட்டாய், ஆனால் நீ சொல்வதற்க்கு முன் அவள் முந்திக் கொண்டாள். நீ அவளிடம் ஐ லவ் யூ சொல்லும் முன் அவள் சொல்லி உன் உதட்டை கவ்வி பிடித்துக் கொண்டாள், எனவே நீ உன் கடைசி ஆசையான உன் காதலை அவளிடம் சொல்லும் முன், பிரளயத்தில் சிக்குண்டு, சிதறி இறந்து போய் இங்கே வந்திருக்கிறாய்..."

நான் பிரமை பிடித்து நின்றிருந்தேன்

"...நிறைவேறாத ஆசையுடன்" என்று அழுத்தமாய் முடித்தார்.

"எனவே... " தொடர்ந்தார்.

"நீ உன் காதலியுடன் போக முடியாது.. நிறைவேறாத ஆசையுடன் நீ ஆவியாக அலைவாயாக" என்று என்னை.... என்னை... ஓ ஓ ஓ ஓ ஓ ஓ.....

முற்றும்..

கதை இத்துடன் முடிகிறது... இருந்தாலும் PART 3 தொடரும் :-)

0 Comments:

Post a Comment

<< Home