தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Tuesday, August 10, 2004

"வலி" - PART - 2

அடுத்த 1 வாரம் அவனை காணவில்லை. பள்ளி காலாண்டு விடுமுறையானதால் அவனை தினமும் பார்க்க வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. சரி வேலையில் பிசி ஆகிவிட்டான் போல இருக்கு என்று சேட் வீட்டுக்கு சென்றேன். அவரிடம் கேட்டதற்க்கு நான் விட்டு போன சிறிது நேரத்தில் வேலை பிடிக்க வில்லை என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டதாக சொன்னார். எனக்கோ கடும் கோபம். இவ்வளவு நல்ல வேலையை விட்டுவிட்டு போய்விட்டானே பாவி. கையில் கிடைக்கட்டும் பார்த்துக் கொள்கிறேன் என்று கறுவி கொண்டு, அவன் முன்பு வேலை செய்து கொண்டிருந்த கடைக்கு போனேன்.

அவனை அங்கே பார்த்தேன். என்னைப் பார்த்தும் பார்க்காதவனாய் உள்ளே போய் விட்டான். கடை முதலாளி எனக்கு தெரிந்தவர் தான், எனவே வசந்தை அழைத்தார். வேறு வழியே இல்லாமல் வெளியே வந்தான். 5 நிமிடம் அனுமதி கேட்டு பக்கத்து டீ கடைக்குப் அழைத்துப் போனேன்.

அவன் ஒன்றும் பேசாமல் அமைதியாகவே இருந்தான். நான் கோபத்தில் இருந்தேன். ஆரம்பமே ஏக வசனத்தில் ஆரம்பித்தேன்.

"என்ன மயிருக்கு அந்த வேலையை விட்டு வந்தே? நல்ல சம்பளம், படிப்பு செலவுக்கு பணம் எல்லாம் குடுக்குற இடத்தை விட்டு ஏண்டா இங்கே வந்து சீரழியிறே? என்ன ஆச்சு உனக்கு. பைத்தியமா? அதான் அங்கே சைட் அடிக்க சேட் பொண்ணுங்க வேற இருக்காங்கலேடா? அப்புறம் என்னடா குறைச்சல். ஜொள்ளு விட்டுகிட்டு அங்கேயே இருக்குறதுக்கு என்ன" என்றேன்.

" டேய் அப்புறம் பேசலாம். சாயங்காலம் ஆத்துக்கு போலாம் அங்கே பேசலாம், இப்போ ஒண்ணும் வேண்டாம்" என்றான்.

" சரி, இப்போ வேண்டாம், ஆனா சாயங்காலம் உன்னை சும்மா விடுவேன்னு மட்டும் நினைக்காதே.. சொல்லிட்டேன்" என்று மிரட்டி விட்டு வந்தேன்.

மாலை நேரம், இருவரும் காவிரி ஆற்றுக்கு சைக்கிளில் போனோம். காவிரி ஆற்றில் தண்ணீர் இருந்த காலம் அது. ஆறு மெதுவாய் சலசலத்து ஓடியது. நாங்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்து ஆற்றின் மறுமுனையில் திருவரங்கம் ராஜகோபுரம் தெரிந்தது. இருவரும் ஒரு படித்துறையில் அமர்ந்தோம். அவன் சைக்கிள் ஓட்டி வரும்போதே அமைதியாகத்தான் இருந்தான். படித்துறையில் அமர்ந்த பின்னும் அமைதியாகவே இருந்தான். நான் அப்போது கொஞ்சம் சூடு தணிந்து இருந்தேன். கோபம் இல்லை. மெதுவாக அரம்பித்தேன்

"என்னடா வசந்த் சொல்லு.. என்ன ஆச்சு ஏன் அந்த வேலையை விட்டு வந்தே?" என்றேன். அவன் கண்கள் லேசாக கலங்கி இருந்தது. எனக்கு கொஞ்சம் பயம் வந்தது. எதற்காக இவன் அழுகிறான். என்ன ஆனது இவனுக்கு.. இவ்வளவு பீடிகை போடுகிறானே என்று, மனதிற்க்குள் ஒரு வித பயம் பரவியது.

"எதுவா இருந்தாலும் சொல்லு வசந்த்.. " என்றேன்.
நிமிர்ந்து பார்த்தவன்

" உனக்கு தெரிஞ்சி தான் அங்கே என்னை வேலைக்கு சேர்த்தியா?" என்றான் மொட்டையாக.

" எது தெரிஞ்சி உன்னை அங்கே வேலைக்கு சேர்த்தியானு கேட்குறே, எனக்கு ஒண்ணும் புரியலே, முழுசா சொல்லு.. என்ன ஆச்சு.." என்றேன் பதற்றத்துடன்.
சில விநாடிகள் தண்ணீரையே பார்த்துக் கொண்டிருந்தவன்... அப்படியே பேச ஆரம்பித்தான்.

"நீ நினைக்கிற மாதிரி அந்த ஆள் அவ்வளவு நல்லவன் இல்லே டா.. அவ்வளவு தான் சொல்ல முடியும்.. போலாமா" என்றான்.

எனக்கு அவனுக்கு என்ன நடந்தது என்று தெரியாவிட்டால் மண்டையே வெடித்து விடும் போல இருந்தது. விடாமல் கேட்டேன்.

"இப்போ சொல்லு, அவன் எப்படி பட்டவனா இருந்தாலும் சரி. நீ சொல்றதை நான் நம்புறேன். நடந்ததை சொல்லு" என்றேன்.

"வேண்டாம்.. தெரிஞ்சிகிட்டா நீ ரொம்ப வருத்தப்படுவே.. அப்படியே விட்டுடு.போலாம் வா" என்றான்.

"மண்ணாங்கட்டி, இப்போ சொல்ல போறியா இல்லையா..சொல்லுடா ஒழுங்கா என்றேன்"
அமைதி காத்தான்

"என்ன அந்த ஆள் கள்ள கடத்தல் செய்யிறானா? உன்னையும் கூட வர சொன்னானா?" என்றேன்.
இளக்காரமாய் சிரித்தான்.பின்

"தெரிஞ்சிக்காம போக மாட்டே. அப்படிதானே"

"ஆமாம் சொல்லு. அப்படித்தான்" நான்.

ஒரு பெருமூச்சுக்கு பிறகு,

"சரி நான் சொல்றேன். ஆனா நீ வேற யார் கிட்டேயும் சொல்ல கூடாது சரியா" என்றான்.

"சரி.. யார் கிட்டேயும் சொல்லல நான். நீ சொல்லு" என்றேன்.

வசந்த் சொல்ல ஆரம்பித்தான்..........

"நீ போனதும், சேட் என் முழு விபரமும் கேட்டான். நானும் சொன்னேன். என் குடும்பம். என் படிப்பு. என்ன கஷ்டம், அத்தனையும் சொன்னேன். எல்லாத்துக்கு உதவி செய்யிறதா சொன்னான். ரொம்ப சந்தோஷமா இருந்திச்சி. அப்புறம் எனக்கு பால் கொண்டு வந்து குடுத்தாங்க சேட்டம்மா... குடிச்சிட்டு வேலை என்னான்னு கேட்டேன்..."

"வசந்.. நீங்க என் கூட அஸோஸியேசன் வாங்கோ.. அங்கே நிறைய பேரு இருக்காங்கோ.. அங்கே வியாபாரம் பார்த்து வந்துட்டு.. அப்புறமா உங்களுக்கு வேலை சொல்லி தர்றோம்" என்றான் சேட்.

ரெண்டு பேரும் கிளம்பி போனோம். அஸோஸியேசன் கட்டிடம் ரொம்ப பெரிசா இருந்தது. 3 மாடி ஏறி கடைசியிலே ஒரு ரூமுக்கு கூட்டிகிட்டு போனான். உள்ளே போனதும், கதவை சாத்தி பூட்டு போட்டுட்டான். அங்கே ஒண்ணும் இல்லே, ஒரே ஒரு பாய் மட்டும் இருந்தது. அதை கீழே விரிச்சான். அது மேல ரெண்டு பேரும் உட்கார்ந்தோம்

"வசந்.. உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சி போச்சி. நான் உன்னை மெட்ராஸ் கூட்டிகிட்டு போறோம். உனக்கு எந்த நடிகை பிடிக்கும் சொல்லுங்கோ, அவ கூட நீங்க ஜாலியா இருக்கலாம் என்ன சொல்லுறீங்க? செலவு பத்தி நீ கவலை படாதே நான் பார்த்துக்குறேன்" என்றான் சேட்.

எனக்கு திகைப்பா இருந்திச்சி, எதுக்கு இந்த சேட் இவ்வளவு பண்றேன்கிறார். எனக்கு ஒண்ணும் புரியலே. வீட்டுல இருந்தவரை வாங்கோ போங்கோன்னு சொன்னவன் இங்கே வந்து சரளமா தமிழ் பேசுறார்ன்னு ஒரே ஆச்சரியம்.

"வசந்.. பேரே எவ்வளவு ஸ்வீட்டா இருக்கு.. உனக்கு நைகி ஷூ வாங்கிகோங்க. உனக்கு எந்த நடிகை வேனும்னாலும் நான் ஏற்பாடு பண்றேன். என்ன சொல்லுறீங்க" என்றான். சேட்டுக்கு வாங்கிகோங்க, சொல்லுறீங்க மட்டும் மரியாதையா வந்தது.

நான் எல்லாத்துக்கும் தலை ஆட்டினேன்.
சேட் "வசந்... நீங்க எனக்கு புள்ளை மாதிரி.. வாங்க என் மடியிலே உட்காருங்க" என்றான்.
இந்த இடத்துல தான் எனக்கு சந்தேகம் வந்தது.

எதுக்காக மடியிலே எல்லாம் உட்கார சொல்றான்னு. இருந்தாலும் தயக்கமா உட்கார்ந்தேன் டா... அங்கே அங்கே.."

எச்சரிக்கை அல்லது வேண்டுகோள்:
"வலி" PART 3
இந்த குறிப்பிட்ட பதிவு சில அருவெருப்பான நிகழ்வுகளை சொல்லப்போகிறது. தயவு செய்து 15 வயதுக்கு உட்பட்டவர்கள் தவிர்த்து விடவும்

0 Comments:

Post a Comment

<< Home