தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Thursday, August 05, 2004

இன்னும் சில நிமிடங்களில்.... - PART 3

முற்றியது தொடர்கிறது....

நெகடிவ் முடிவை விரும்பாதவர்களுக்காக, பின் இணைப்பு..

ஓ ஓ ஓ ஓ என்று ஓலமிட்டு கதறி அழுத என்னைப் பார்த்து சித்திர குப்தன்
"சே நிறுத்து.. அழாதே.. என்னை முழுசா பேச விடு... " என்றார்.

அழுகையை நிறுத்திவிட்டு அவரைப் பார்த்தேன்..அவர் என் முகத்தையும், கலங்கி போய் இருந்த என் கண்மணி மீராவின் முகத்தையும் பார்த்து விட்டு, மெதுவாய்..

"கண்ணா கலங்காதே.. எப்போது நீயும் அவளும் ஒருவருக்கொருவர் மனமுவந்து காதலிக்க ஆரம்பித்தீர்களோ, அன்றே இருவரின் எண்ணங்களும் ஒன்றாகி விட்டது. எண்ணங்கள் ஒன்றானதால் ஆசைகளும் ஒன்றாகி விட்டது. எனவே அவளது ஆசை நிறைவேறியது என்றால், உன் ஆசையும் நிறைவேறியதாகவே அர்த்தம். போ கண்ணா, உன் இனிய காதல் வாழ்க்கையை சொர்க்கத்தில் தொடங்கு" என்று புன்முறுவலுடன் ஆசிர்வதித்தார்.....

அப்புறம் நிஜமாகவே எங்கள் கல்யாணம், முப்பது முக்கோடி தேவர்கள் பூச்சொரிய இனிதே நடந்தது. :-)

நிஜமாகவே முற்றும்..

3 Comments:

Post a Comment

<< Home