தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Friday, August 13, 2004

வலை பதிப்பதற்க்கு காரணங்கள்

எதுக்கு வலை பதிக்கிறீர்கள் என்று நாமக்கல் பாலா - ராஜாவிடம் கேட்டு இருக்கிறார். யாரும் என்னை கேட்கும் முன் நானே சொல்லி விடுகிறேன் :-)

இதோ நான் வலை பதிப்பதற்க்கு காரணங்கள்
- என் எழுதும் திறனை வளர்த்துக்கொள்ள
- என் எழுத்தில் உள்ள குறைகளை தெரிந்து கொள்ள
- என்னால் எழுத முடியுமா என்று தெரிந்து கொள்ள
- என் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள
- என் அனுபவங்களை சொல்லி புலம்ப
- நான் ரசித்ததை சொல்லி கொள்ள (கொல்ல)

எல்லாவற்றிக்கும் மேல் இதை எல்லாம் செய்து பார்க்க/பரிசோதிக்க "வலைப்பூவானது இலவசம்" என்பது தான் நான் விடாமல் பதிப்பதற்க்கு காரணம்.

ஒருவேளை இது கட்டணம் ஆக்கப்பட்டால் அதுவும் என் வரவுக்கு தக்கவாறு இருந்தால் நான் தொடருவேன். இல்லையென்றால் ஞானதேவன் அவன் பாட்டுக்கு இதை நிறுத்தி விட்டு, தனக்கு எழுதும் வேலை சரி படாது என்று நினைத்துக் கொண்டு சும்மா இருப்பான்.

வலைபதிப்பது ஒரு முயற்சி அல்லது பயிற்சி, இந்த முயற்சி/பயிற்சி இலவசம் என்பது தான் துணிந்து நிறைய பேரை(என்னை போல் உள்ளவர்களை) எழுத வைத்திருக்கிறது. மற்றப்படி வலைபதிவு என்பது புகழை அள்ளிதரும், பிரபலம் ஆக்கும் என்பதெல்லாம் எளிதில் சாத்தியப்படக் கூடியதன்று. எனக்கு தெரிந்து, வலை பதிப்பதால் 10-20 பேர்கள் நண்பர்களாக கிடைக்கலாம். அது போதும் எனக்கு.

0 Comments:

Post a Comment

<< Home