தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Monday, August 16, 2004

"மாங்காமணி எம்.பி.பி.ஸ்" - துண்டு 2

அடுத்த நாள் சோமதாஸ் அறிக்கை "இந்த சினிமாகாரங்க பண்ற தேவையற்ற ஸ்டைல் காரணமா பல தமிழ் இளைஞர்கள் வாழ்க்கை நாசமா போகுது, உருபடாம போகுது, அதை தடுத்து நிறுத்தனும், இனி எவனும் சினிமாலே தம் அடிக்கிற மாதிரி, தண்ணி அடிக்கிற மாதிரி நடிக்க கூடாது. அப்படி நடிச்சா.. கோடிக்கணக்கான தமிழ் இளைஞர்கள் பொங்கி எழுந்து அந்த படம் ஓடுற தியேட்டர், படப்பொட்டி, படம் பார்க்க வந்தவங்க எல்லாரையும் அடிச்சி நொறுக்கிடுவாங்க. அப்படி ஏதாவது நடந்தா எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லேன்னு இப்போவே பத்திரம் எழுதி குடுத்துடறேன்"

***
இதுக்கு நடுவுலே மாயலலிதா குடுத்த வேட்டி கிழிஞ்சி போனதாலே, திரும்பவும் அருணாபதி கிட்ட போறார் சோமதாஸ்

"வாய்யா சோமதாஸ், அங்கே போய் மானம் ஈனம் கெட்டு திரும்பி வர்றியா.. "
என்று இளக்காரமா சிரிச்சார்.

"வெளியே சொல்லாதீங்க அருணாபதி. எல்லாத்தையும் மறந்துடலாம். இனி சத்தியமா நான் அந்த பக்கம் போக மாட்டேன். வேட்டி என்ன, கோவணமே பறந்தாலும் இனி நான் உங்க பக்கம் தான்.இது சத்தியம் சத்தியம் சத்தியம்"

" இது மாதிரி நீ ஆயிரம் சத்தியம் பத்திரம் எழுதி தந்து இருக்கே. சரி விடு. நம்புறேன். இப்போ தேர்தல் வருது. என் கூட வேலை செய், உனக்கும் 4 இடம் தர்றேன்."

வாயெல்லாம் பல்லாக இளித்த படி சோமதாஸ் எழுந்து போகிறார்.

"கோழி நடை போட்டு கூரையில் ஏறு..
கூரைக்கு வந்ததும், கொக்கர கோன்னு கூவு
என் பேரு சோமதாஸு, மகன் பேரு மாங்காமணி
என்னோட உள்ளதெல்லாம் வெட்டு வெட்டு வெட்டுகிளி.."
அப்படின்னு பாட்டு வருது...

***
மாங்காமணி நல்லா தூங்கிட்டு இருக்கான்.
"டேய் மாங்கா.. எந்திரிடா.. இப்படியே தூங்கிட்டு இரு.. உருப்படாம போய்டுவே."

லேசாய் கண்ணை கசக்கியவாறு எழுந்த மாங்காமணி
"என்னாப்பா இந்த நேரம் எழுப்பிகிட்டு.. "

"கேள்வி கேட்க்காதே, அப்படியே என்கூட கொல்லைப்பக்கமா வா.. ரன்ராமன்சிங்கை பார்த்துட்டு விடியறதுக்குள்ளே வந்துடலாம்."

"அந்தாளை ஏன் பார்க்கணும் அதான் ஏற்கனவே இத்தானியா பூந்தியை பார்த்தாச்சே?"

"டேய் கேள்வி கேட்காம வா.. கொல்லைபக்கமா போறதை யாரும் பார்க்க கூடாது.. எந்திரிச்சி வா.."

****
மாங்காமணி மந்திரி அலுவலகம்.நிருபர் கூட்டம்

"நீங்க எப்படி மந்திரி ஆனீங்க.."

"நான் நானாவே மந்திரி ஆயிட்டேன்".

"உங்க அப்பா சிபாரிசு செஞ்சாரா?"

"இல்லை, கட்சி சிபாரிசு செஞ்சது".

"கட்சிலே யாரு சிபாரிசு செஞ்சாங்க"

"கட்சிலே இருக்குற சோமதாஸ் சிபாரிசு செஞ்சார்"

"சோமதாஸ் தானே உங்க அப்பா?"

"சோமதாஸ் தான் என் அப்பா. ஆனா அவர் சிபாரிசு செய்யலே. கட்சிலே இருக்குற சோமதாஸ் தான் சிபாரிசு செஞ்சார்"

"அப்போ ரெண்டு பேரும் வேற வேறயா?"

"இல்ல.. என் அப்பா சோமதாஸ் தான் கட்சிலே இருக்கார். ஆனா அவர் சிபாரிசு பண்ணும் போது, கட்சி கூட்டத்துலே இருந்தார். அப்போ அவர் கட்சி தலைவர். அதுனாலே அது கட்சி எடுத்த முடிவு. என் அப்பா எடுத்த முடிவு இல்லே."

மண்டை காய்ந்து போன நிருபர்கள் எதை எழுதுவது என்று தெரியாமல் திரு திரு வென்று முழித்த படி வெளியேறுகிறார்கள்.
****

பெஞ்சு மீது நிற்கிறான் மாங்காமணி. கீழே சவுக்குடன் சோமதாஸ்
"என்னடா இது.. என்ன வேலை செஞ்சி இருக்கே?? யார்கிட்டே கேட்டு இப்படி அறிக்கை விட்டே.. எப்போ இந்த தொற்று நோயை கண்டு பிடிச்சே?? என்கிட்டே கேட்காம எப்படி நீ வெளியே சொல்லலாம்... இப்போ பாரு இந்த தினப்பூ பத்திரிக்கை உன்னை நார் நாரா கிழிச்சி இருக்கு.. இரு கவனிச்சிகிறேன்"

"அய்யோ அட்ச்சிடாதீங்கப்பா.." என்று அழுகிறான்.

"அடச்சே உன்னை அடிக்க இல்லை... தினப்பூவை அடிக்கிறதுக்கு..அடுத்த நாள் தினப்பூ அலுவலகம் நொறுக்கப்படுகிறது..
***

இப்படி துண்டு துண்டா இந்த கேடு கெட்ட படம் போகுதுங்க. உங்களுக்கு இதுவரைக்கும் ஏதாசும் புரிஞ்சி இருந்தா ஒரு கடுதாசி போடுங்க..

007 கிட்ட சொல்லி இந்த கண்றாவியை எடுத்த இடத்துலேயே வைக்க சொல்லிட்டேன்....

துண்டு காலி.

0 Comments:

Post a Comment

<< Home