தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Saturday, August 14, 2004

"மாங்காமணி எம்.பி.பி.ஸ்" - துண்டு 1

"மாங்காமணி எம்.பி.பி.ஸ்"ன்னு ஒரு படம் வரப்போகுதாம். பேரை பார்த்ததும் எனக்குள்ளே ஒரு பொறி, கடலை தட்டிச்சி. உடனே 007க்கு போன் போட்டேன். இப்போ அதோட திரைக்கதை (ஸ்கிரிப்ட்) என் கையிலே.
ஆ ஹா ஹா ஹா (ஒண்ணும் இல்லே சிரிப்பு தான்). படிச்சி பார்த்தேன், கதை துண்டு துண்டா இருக்கு. ஒரு தொடர்ச்சி காணோம். கிடைச்ச வரை தர்றேன். படிச்சிகங்க.

படத்தோட ஹீரோ-மாங்காமணி (ஹீரோயின் இல்லையாம்) மற்றும் சோமதாஸ்
மற்றவர்கள் - அருணாபதி, மாயலலிதா, ரன்ராமன்சிங், இத்தானியா பூந்தி மற்றும் பலர்.

தயாரிப்பு - சோமதாஸ். (பையனை வச்சி அப்பா படம் எடுத்து இருக்கார்)

மாங்காமணி 5 வயசு குழந்தை. பென்சிலை உடைச்சிகிட்டு இருக்கார். அவங்கம்மா ஓடி வர்றாங்க.

"இப்படி பண்ணக் கூடாது செல்லம், கையிலே குத்திடும்" என்கிறார். அப்பொழுது சோமதாஸ் வருகிறார்.

"தடுக்காதே அவனை. அவன் ரத்தம் அப்படி. பென்சில் உடையாட்டி அவன் கையிலே கத்தி குடு. அறுத்து போடட்டும். மரத்தால் ஆன பென்சிலை பார்த்தா அவனுக்கு உடைக்கத்தான் தோணும். அதுக்காக அவனை நீ திட்டாதே. அவன் என் ரத்தம். அப்படித்தான் இருப்பான்."

"ஐய்யோ, அவனும் உங்க மாதிரி ஆயிடுவானா.. அதான் எனக்கு பயமா இருக்குங்க. வீடே பைத்தியகார கும்பலா இருக்கும் அப்புறம். வேண்டாம்... " என்று அழுகிறார்.

"ச்சீ.. இப்படி முட்டள் தனமா பேசாதே. அவன் பெரிய டாக்டர் ஆகி பல தொற்று வியாதி கண்டு பிடிப்பான். யாரையும் எதிர்க்காமலே பார்லிமெண்ட் மந்திரி ஆவான்.. அவன் ஜாதகம் உனக்கு தெரியாது.. எனக்கு மட்டும் தான் தெரியும்..." என்று சொல்லிவிட்டு
திரும்புகிறார்..

டைட்டில் சாங்....

"அதாண்டா இதாண்டா மாங்காமணி வந்தான்டா
வட தமிழ்நாடே வன்னியருக்கு சொந்தம்டா
சோமதாஸு சொல்லிடுவான்டா டா டா டா
மாங்காமணி நடந்திடுவான்டா டா டா டா
நான் தொகுதி குடுத்த ஆளை மறந்ததில்லடா
ஆனா ப்லிமு காட்டுற ஆளை விடுவதில்லடா.. ஆ ஆ ஆ"

இப்படி பாட்டு முடியும் போது..

மாங்காமணி பெருசா வளர்ந்துடுறார்.அவரை க்ளொசப்ல காட்டுறாங்க. கையிலே ஒரு மரச்செடி வச்சிகிட்டு இருக்கார். அவரை சுத்தி
"ஜைன் ஜப் ஜைன் ஜப்"ன்னு அடிச்சிகிட்டு ஒரு கும்பல் இருக்கு.

"ஊஊஉலுலு உலு உலு" கத்திகிட்டு ஒரு கும்பல் (பாடிகிட்டு) இருக்கு.

"என்னை வளர்க்கும் பச்சை தாயக இயக்கமே, அதன் வேர்களே, விழுதுகளே, பூக்களே, வண்டுகளே, உங்களுக்காக உழைக்க நானிருக்கிறேன், என் ஒரு துளி வியர்வைக்கு 1 மரம் வெட்டிதந்த காடு வெட்டிகளுக்கு என் நன்றியை தெரிவிக்கிறேன். இனி யாரும் எந்த மரங்களையும் வெட்டக்கூடாது, நாம் தான் அதற்கு பாதுகாப்பு. அப்படி யாரேனும் மரம் வெட்ட முயற்சித்தால்.. நாம் வெட்டிடுவோம்.. "
அப்போது ஒரு தொண்டன்.

"எதை தலைவா? மரத்தையா இல்லை மரம் வெட்ட வந்தவனையா?"

"குழப்பம் வேண்டாம் தெளிவாக சொல்கிறேன். இதை பத்தி சோமதாஸ் சொல்வார்" என்று சொல்லிவிட்டு என்ன சொல்வது என்று தெரியாமல் பேந்த பேந்த முழித்தப்படி அமருகிறார்.

சோமதாஸ் எழுந்து

" நான் ரொம்ப பேசப் போறது இல்லே. உங்க சந்தேகத்துக்கு மட்டும் பதில் சொல்றேன். ஏன்னா இது கட்சி மீட்டிங் இல்ல, அசிங்கமா பேசுறதுக்கு. அதுனாலே ...இதோ என் பதில்... தப்பு நம்ம பக்கம் இருந்தா நாம மரத்தை வெட்டுவோம், தப்பு எதிராளி பக்கம் இருந்தா அவன் தலையை வெட்டுவோம்.." என்று முடித்தார்...

கூட்டம் கரகோஷம் எழுப்பியது.
அப்படியே ஒரு சாங்...
"நம்ம அய்யா காலடி மண்ணெடுத்து..
சாராயத்தை புதைச்சி வச்சோம்..
அய்யா அவர் சொல்லுக்குத்தான்
மரத்தை எல்லாம் விட்டுவச்சோம்.."

***
காட்சி மாறுகிறது. அண்டர்வேருடன் ஓடி வருகிறார் சோமதாஸ்.பின்னால் யாரும் இல்லை. மாங்காமணி தடுத்து நிறுத்துகிறார்.

"என்னாச்சுப்பா என்னாச்சு?? வேட்டி எங்கே.. காத்துல போயிடிச்சா??" என்கிறார்.
"இல்லைடா மகனே.. அந்த அருணாபதி இருக்கானே, பேசலாம்னு கூப்பிட்டு என் வேட்டியை உருவிட்டான்.. அவனை சும்மா விட கூடாது.. வா போகலாம்.." என்றார்.

"எங்கே போறதுப்பா?"

"மாயலலிதா கடைக்கு போய் வேட்டி வாங்கிட்டு.. அந்த அருணாபதியை பழி வாங்கலாம்."

மாயலலிதா கடை..

சோமதாஸ் சொல்கிறார்,
"நல்ல வேளை, அவன் வேட்டி உருவும் போதே ஓடி வந்துட்டேன், இல்லை என் கோவணத்தையும் உருவி இருப்பான்..." என்றார் வேதனையுடன்.

"அதுக்கு தான் சொன்னேன், இங்கே வந்து வேட்டி வாங்கிகங்கன்னு... கொஞ்சம் முன்ன பின்ன ஆனாலும், உங்க மானம் போய் இருக்காதுல்ல?" என்றார் மாயலலிதா..

"அருணாபதியோட இனி ஒட்டும் இல்ல உறவும் இல்ல.. இனி நம்ம வழி தனி வழி" என்றவாறு சோமதாஸ் வேட்டியை தூக்கி கட்டி கிளம்புகிறார்.

"வேட்டியேஏஏ கிழிந்தாலும்
தாங்கி கொள்ளும் இதயம்..
சிறு பழி தாங்க கூடலியேஏஏ "
என்ற சோகப் பாடல் முடிகிறது..
***
காட்சி மாறுகிறது..அப்போது.. மாங்காமணி தம் பிடிக்கிறார். சிகரெட்டை வாயில் வைத்துக்கொண்டு, தீக்குச்சியை அங்கே வேலை செய்யும் பெண்ணின் கொண்டையில் உரசி நெருப்பு வரவழைத்து பற்ற வைக்கிறார்.
"மாங்காமணி என்ன இது.. எங்கே கற்றுகொண்டாய் இதை.. நீ ஒரு டாக்டர்.. மறந்து விட்டாயா?"

மாங்காமணி அவசரமாய்..

"அப்பா அப்பா... இது ஒண்ணும் தப்பு இல்ல, தமிழ்நாட்டு சூப்பர் ஸ்டார் இருக்கார்ல, அவரே இப்படி தான் செய்வார்.. கண்டுக்காதீங்க"
என்று சொல்லி விட்டு தன் பாட்டுக்கும் தம் அடிக்க ஆரம்பித்தார்.
சோமதாஸ் முகம் சிவக்கிறது
...........................................................
துண்டுகள் வரும்....

1 Comments:

  • At Sat Aug 14, 05:08:00 AM EDT, Blogger Pavals said…

    மாங்காமனி MBBS, நூறு துண்டுகள் வரை ஓட வாழ்த்துக்கள்..

     

Post a Comment

<< Home