தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Friday, August 13, 2004

மரணதண்டனை

தனஞ்செய்க்கு மரணதண்டனை அவசியமாக தேவை. மனித உரிமை காக்கிறேன் பேர்வழி என்று, தீவிரவாதிகளுக்கும், கொலை பாதகர்களுக்கும், காம வெறி பிடித்த மிருகங்களுக்கும் காவடி தூக்கி பிரபலம் ஆவதென்பது வெட்ககேடு.

நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தில் வரும் கடைசிக் காட்சியை நினைவுப் படுத்திப் பாருங்கள். தன் மகளுக்கு ஆபத்து என்னும் போது, நீதிபதியே துப்பாக்கி எடுப்பார். அது ஒன்றும் சினிமாவுக்காக எடுக்கப்பட்டது அல்ல என்பது என் கருத்து. எதுவும் தனக்கென்று நடக்கும் போது தான் வலி தெரியும். காம வெறி பிடித்த அரக்கனால் கொடூரமாக சிதைக்கப்பட்டு தன் உயிரை இழந்த அந்த சிறுமி, இன்று மனித உரிமை பேசும் மடமக்கள் ஒருவரின் மகளாக இருந்தாலும் இப்படி தான் பேசுவாரா? தான் செய்வது என்னவென்றே தெரியாத ஒருவனை தண்டிப்பது தவறு என்றால் அந்த ஒன்றும் தெரியாத பச்சை மண்ணை கொண்டு போய் மனித உரிமை பேசும் யாராவது ஒருவர் வீட்டில் வைத்து வளர்க்க சொல்ல வேண்டும். அப்போது தெரியும் மிருகம் தன்னை அறியாமல் என்ன செய்யும் என்று.

என்னை கேட்டால் அவர்களுக்கு தரப்படும் வலியில்லாத மரண தண்டனையும் குறைவு தான். தான் செய்த கொடூரத்தின் வலி என்னவென்றே அறியாமல் சாவது அவர்களுக்கு தரப்படும் தண்டனை அல்ல விடுதலை.

1 Comments:

Post a Comment

<< Home