தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Wednesday, November 09, 2005

யாரை குற்றம் சொல்ல?

கோபம் கொண்ட இயற்கை சீறி விழுகிறது. நிஜமாகவே தமிழகம் தத்தளிக்கிறது. நான் சென்னையில் இருந்தாலும், சொந்த ஊர் சேலமும், பிறந்த ஊர் திருச்சியும் மூழ்கி போவதை பற்றி அறிந்து நொந்து போகிறேன். என் சொந்தங்கள் காவேரி பக்கம் தானே வாழ்கின்றனர். காவேரியில் குதித்து குளித்தவன் தானே நானும். அப்போதெல்லாமும் மழை பெய்யும், தொடர்ந்து 2,3 நாட்கள். சுழித்து ஓடும் ஆற்றைக் கண்டு மலைத்து நின்று ரசித்திருக்கிறேன். இப்போது அதை எல்லாம் மீறி.. கரை தாண்டி வந்துவிட்ட காவிரி அன்னையை என்ன சொல்லி கடிந்து கொள்ள? அவள் எத்தனை கொடுத்தாள்? அத்தனையையும் திருப்பி கேட்கிறாளோ என்று பயமாய் இருக்கிறது.

தினமும் காலை மாலை ஊரிலிருந்து போன் வந்து விடும், "நல்லா இருக்கியா நீ? மழை எப்படி அங்கே? தண்ணி இல்லையே? சன் நியூஸ் பார்த்து பயந்துட்டோம்".. எனக்கும் இதே நிலை தான் எப்போதெல்லாம் சன் நியூஸ் பார்கிறேனோ அப்போதெல்லாம் பயம் வந்து விடும்.. வர வர சன் நியூஸ் "ஷாக் நியூஸ்" ஆகி விட்டது. உள்ளதை உள்ளபடி காட்டாமல், அதிகப்படுத்தி காட்டும் அதன் போக்கு வருந்தத்தக்கது. தொடர்ந்து 1 வாரம் அதை பார்த்தால் மனசிதைவு நோய் வர வாய்ப்பிருக்கிறது. ஜேம்ஸ் பாண்ட் படத்தில் ஒரு வசனம் வரும், ஒரு டிவி கம்பெனி நடத்தி வரும் வில்லன் சொல்வான் "கெட்ட செய்தியை போல் நல்ல செய்தி எதுவும் இல்லை" என்று. அதை அப்படியே பின்பற்றுபவர்களில் முதலிடம் சன் நியூஸ்க்கு குடுக்கலாம்.

டிசம்பர் 26 ல் இருந்து இன்று வரை சுனாமி என்ற வார்த்தையை உபயோகிக்காமல் அவர்கள் செய்தி வாசித்ததில்லை. கின்னஸ்க்கு அனுப்பி வைக்கலாம்.

சின்ன விஷயத்தையும், பீடிகை போட்டு, பெரிது படுத்தி..
சீரங்கம் மூழ்கியது..
சென்னை தீவானது...
மக்கள் பீதி, பேதி, பதற்றம்..
என்று முழக்கமிட்டு பலரின் கண்களில் கவலையை குடி அமர்த்துகிறார்கள். இதை இதுவரை யாரும் கண்டிக்காதது எனக்கு ஆச்சரியம் அளிப்பதாக தான் இருக்கிறது.

யாரை குற்றம் சொல்ல?

0 Comments:

Post a Comment

<< Home