தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Wednesday, December 08, 2004

மேலும்....

அனுபவசாலிகளிடம் மிகவும் எதிர்பார்ப்பது நல்ல நேர்த்தியான நடை, உடை மற்றும் வார்த்தை பிரயோகங்கள்.அவரின் பேச்சுகளை வைத்தே அவரது அணுகுமுறையை ஓரளவு கணித்துவிட முடியும். எனவே இதில் எல்லாம் சிறிது கவனம் செலுத்தினாலே மிக எளிதில் நேர்முக தேர்வில் வென்று விடலாம்.

நேர்முக தேர்வுக்கான நேரத்திற்கு சரியாக போவது மிக அவசியம். பல சமயம் வேறு அலுவலகத்தில் பணி புரிபவர்கள் தான் வருவார்கள். எனவே பல்வேறு காரணங்களை கூறிக்கொண்டு தாமதமாய் செல்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். 2 மணிக்கு ஒருவரை வர சொல்லி இருந்தேன். ஆனால் அவர் வந்தது 2.40க்கு 20 நிமிடத்தில் அவரை அனுப்பிவிட்டேன். அவர் பதட்டமாக இருந்ததாலும், வியர்த்து வழிந்து கொண்டிருந்ததாலும், முதல் 10 நிமிடம் ரொம்பவும் தான் திணறி பேசினார். முடிவில் வாய்ப்பை இழந்தார்.
இப்போதைக்கு இது போதும்.. மீண்டும் சில தேர்வுகளுக்கு பிறகு இதை தொடர்கிறேன்.

0 Comments:

Post a Comment

<< Home