தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Saturday, September 04, 2004

"மனநிலை குன்றியவர்கள்" ???!!!!!

முகுந்த் தன்னுடைய பதிவில், ஈராக் தீவிரவாதிகளின் கொலை அரங்கேற்றத்தினை காட்டிய சன் டிவியை எப்படி அடக்குவது என்று கேட்டு இருக்கிறார். அவரின் வருத்ததில், கோபத்தில் நியாயம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொன்ற கொலைகாரனை, கொல்லாமல் நல்வழி படுத்த வேண்டும் என்று நினைக்கிற ஆத்மாக்கள், கொலையை நேரில் பார்த்த உடனேயே அது மற்றவர்களை வன்முறைக்கு தூண்டும் என்று ஆதங்கப்படுவது சற்றும் பொருத்தம் இல்லாதது. மனநிலை சரியில்லாமல் தான் அவர்கள் இந்த கொலையை செய்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு, அவனை மன்னித்து, தீவிரவாதியை நினைத்து பரிதாபம் கொள்ள வேண்டும்.அந்த தீவிரவாதியை பிடித்து தூக்கில் போட்டால் அது பலருக்கு (முகுந்துக்கும்) பிடிக்காது. காரணம் தீவிரவாதிகள் மனநிலை தவறிப் போய் தான் இப்படி செய்கிறார்கள், அவர்களை எல்லாம் சிறையில் அடைத்து நல்ல வழி காட்டி விடுதலை செய்ய வேண்டும் என்பார்கள்.

அவர்களை நல்வழிப் படுத்தும் முன், தீவிரவாத தொண்டர்கள் யாரேனும் வெளியே இருந்தால், அவர்கள் இப்போது ரஷ்யாவில் நடப்பது போல், இல்லை நமக்கு காந்தஹாரில் நடந்தது போல், பிணை கைதிகளை வைத்துக்கொண்டு, மனநிலை சரி இல்லாமல் சிறையில் வாடும், தீவிரவாதிகளை விடுவிக்க சொல்லி மிரட்டி, அழைத்துக்கொண்டு போவார்கள். மனநிலை தவறிய தீவிரவாதிகளும் உயிரோடு இருக்கணும், அவர்களின் கையில் மாட்டாமல் நாம், நம் குடும்பம், ஓர், நாட்டையும் காப்பாற்றனும். அப்படியே தப்பி தவறி தீவிரவாதி மாட்டிக் கொண்டால், அவனை மன்னித்து நாம் மனிதர்களாக நடக்க வேண்டும். இத்தனையும் எப்படி செய்வது??

சன் டிவி செய்வது தப்பே இல்லை. தீவிரவாதிகளின் பக்கம் சாய்ந்து பேசும் "மனித உரிமை காக்கும் மஹாத்மாக்கள்" அதிகம் வாழும் தமிழ்நாட்டில், சாதாரணமாக, கழுத்தை அறுத்து, கொன்று கூறு போட்டதை எல்லாம் பார்த்து தமிழ் மக்கள் எல்லாம் கெட்டு விடுவார்கள் என்று பயப்படுவது நம்ப முடிய இல்லை.

முகுந்த் அவர்களே, சன் டிவி காட்டியது "மனநிலை குன்றியவர்கள்" பற்றிய செய்தி குறிப்பு என்று நினைத்துக் கொள்ளுங்கள்(வழக்கம் போல்). அதைப் பார்த்து பயப்பட வேண்டாம். அவங்க டிவியிலே காட்டியது ஒண்ணே ஒண்ணு தான். நம்ம நாட்டில் இதை விட மோசமாக மன்னிக்கவும் மனநிலை தவறியவங்க நிறைய பேரு இருக்காங்க. அவங்க ஜெயில்லேயும் இருப்பாங்க. பாவம் அவங்களை எல்லாம் நல்ல வழி படுத்தி வெளியே கொண்டு வர்றது தான் மனித குல மாணிக்கங்களுக்கு அழகு. அதை விடுத்து, தீவிரவாதியை கெட்டவனாக சித்தரிக்கும், அதை படம் போட்டு காட்டும் சன் டிவியை எதிர்ப்பது வீண் வேலை, இல்லையா?

0 Comments:

Post a Comment

<< Home