தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Wednesday, September 01, 2004

மகாத்மாக்கள் தொடர்ச்சி....

மகாத்மாக்கள் தொடர்ச்சி

NONOவுக்கு ஒரு பதில்.

ஆகஸ்ட் 25 2004 தேதியிட்ட இந்தியா டுடே பத்திரிக்கையில் 27ம் பக்கத்தில் 27 எண் போட்ட ஒரு பத்தி.

மரணமே தீர்வு

ரேப் குற்றவாளிக்கு மரண தண்டனை.

பிரச்னை
இந்தியாவின் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார். குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் தண்டனை ஒன்றிலிருந்து 10 ஆண்டு சிறைதான். பல கைதிகள் மூன்று, நான்கு வருடமே சிறையில் இருக்கிறார்கள்.

தீர்வு
மரண தண்டனை. இது பாலியல் பலாத்கார சம்பவங்களை குறைக்கும் என்கிறது தேசிய பெண்கள் கமிஷன். 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற தனஞ்சய் சாட்டர்ஜியின் மரண தண்டனைக்கு மக்கள் காட்டும் ஆதரவு, இதற்கு பெரும்பான்மை வாக்குகள் இருப்பதை காட்டுகிறது.

"பாலியல் பலாத்காரம் என்பது கொலையை விட கொடுமையானது. பாதிக்கப்பட்ட பெண் அவமானத்துடனேயே வாழ வேண்டியிருக்கிறது." ஷோபா டே. எழுத்தாளர்.

0 Comments:

Post a Comment

<< Home