தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Tuesday, August 24, 2004

சிறைப் பறவை

"குயிலை பிடிச்சி கூண்டில் அடைச்சி
கூவ சொல்லுகிற உலகம்!!
மயிலை பிடிச்சி காலை உடைச்சி
ஆட சொல்லுகிற உலகம்!!
அது எப்படி பாடுமய்யா??
அது எப்படி ஆடுமய்யா??
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ......."

இதுவரை இந்த பாட்டை கேட்டு கலங்கின நான் இப்போது அனுபவிக்கிறேன். சந்தோசமா, தான் உண்டு, தன் வேலை உண்டுன்னு இருந்த என்னை, எங்க பாஸ் கூப்பிட்டு, அவர் பக்கத்துல உட்கார வச்சிக்கிட்டார். இனி ஆபீஸ் நேரத்துல நான் எப்படி வலைப்பக்கம் வர முடியும்? எப்படி எழுதுறது? எல்லாம் சோகமயம். நேத்து காலையில் இருந்து நான் இந்த பாட்டை மட்டும் முணுமுணுத்துக்கிட்டு இருக்கேன். வேற என்ன செய்யிறது?.

இருந்தாலும் நம்ம ஊர் பழமொழி ஒண்ணு சொல்லுவாங்க
"சொறி பிடிச்ச குரங்கும், சிரங்கு பிடிச்சவன் கையும் சும்மா இருக்காது"ன்னு. அது மாதிரி தானே நானும். ஏதோ எழுதி எழுதி பழகிட்ட எனக்கு, நாள் முழுதும் சும்மா ஆபீஸ் வேலை மட்டும் பார்க்கச் சொன்னா முடியுமா? என்ன செய்யிறதுன்னு யோசிச்சேன்.

எனக்கு குடுத்திருக்குற கணினி, விண்டோஸ் என்.டி. எனக்கு அட்மினிஷ்ட்ரேட்டர் உரிமையும் கிடையாது. எதுவும் புதுசா டவுன்லோட் அல்லது இன்ஸ்டால் பண்ண முடியாது. அவ்வளவு ஏன், இந்த கம்ப்யூட்டர்லே யூனிகோட் கூட இல்ல :(. மெஷின் ஆன் செஞ்சா 10 நிமிஷம் ஆகுது. இதையெல்லாம் பார்த்து எனக்கு ரத்தக் கண்ணீர் வராதது தான் மிச்சம். ஆனா கடவுள் புண்ணியத்துல நோட்பேட் இருந்திச்சோ இல்லையோ நான் தப்பிச்சேன்.

நோட்பேட் யாருக்கும் சந்தேகமும் வராது. அதுனாலே இதுலே எல்லாத்தையும் டைப் செஞ்சிட்டு, ப்ளாப்பி போட்டு வீட்டுக்கு கொண்டு போய் தமிழுக்கு மாத்தணும் :(

"அடாது மழை பெய்தாலும் விடாது...???"

" ஆற்று வெள்ளத்தை அணை போட்டு தடுக்க முடியுமா??"

இப்படியெல்லாம் யோசிச்சி யோசிச்சி இதை டைப் பண்றேன்.

"ஞான தேவனுக்கும் காலம் வரும்
காலம் வந்தால் பதிவு வரும்
பதிவு வந்தால்
அனைவரையும் அழுக (படிக்க) வைப்பானே..."

கண்ணீருடன்... :(

0 Comments:

Post a Comment

<< Home