தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Sunday, August 22, 2004

வாழ்க நீதி!!

மற்றும் ஒரு கொடூரனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிஸான் மார்வாரி என்ற மிருகம், 6 வயதே ஆன ஒரு சிறுமியை கொன்று, பின் புணர்ந்து, உடலை வேறு வெட்டி எறிந்து போய் இருந்திருக்கிறான். தீர்ப்பளித்த நீதிபதி தனஞ்செய்யின் வழக்கையும் உதாரணம் காட்டி இவனுக்கு தூக்கு தண்டனை அளித்துள்ளார். அவரை வணங்குகிறேன்.

ஐயா மனித(??) உரிமை தர்மவான்களே.. இனி உங்களுக்கு கொஞ்ச நாள் வேலை இருக்கும். இவனை அப்பாவி, பால் குடிக்கும் பிஞ்சுக்கு சமம், ஒரு மனிதனின் உயிர் எடுக்கும் உரிமை இன்னொரு மனிதனுக்கு இல்லை. இவனை கொன்றால் நீதியும் கொலைகாரன் என்பது போல் ஆகிறது என்று ஆங்காங்கு கூடி நின்று கூவி கூவி டிவிக்கு பேட்டி குடுத்து, மனிதர்களை(???) வாழ்விக்க வந்த வானத்து தேவர்கள் போல் படம் காட்டி, கொஞ்சம் பிரபலம் ஆகும் வழியை பாருங்கள். இவனை வரிந்து கட்டி காப்பாற்றி விட்டால், அந்த சிறுமியை பெற்ற தாயின் வயிறு எரிச்சல் உங்களை அமோகமாய் வாழ வைக்கும்.

வாழ்க கொலைகார கொடூரன்கள்!!!

வாழ்க அவர்களை காப்பாற்றும் மனித(???) உரிமையாளர்கள்!!!!

1 Comments:

  • At Sun Aug 22, 05:03:00 PM EDT, Blogger சாகரன் said…

    இது குறித்த தகவல் இணையத்திலுள்ள எந்த செய்தித்தாள்களிலாவது வந்திருக்கிறதா?

     

Post a Comment

<< Home