தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Thursday, August 26, 2004

மகாத்மாக்கள்

முன்குறிப்பு:-
முகுந்தின் பதிவிற்கு எதிர்வினையாக வைத்துக்கொள்ளலாம்.

இதை எழுதுவதற்க்கு நான் மிகவும் வருந்துகிறேன். யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. இருப்பினும் பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்த சில வார்த்தைகள் அவசியமாகிறது. இந்த பதிவை இப்படி எழுதுவதற்க்கு நான் நிஜமாகவே வருந்துகிறேன்.

மரண தண்டனையை ஒழிக்க வேண்டும், யார் என்ன தப்பு செய்திருந்தாலும் மன்னித்து அவர்களை திருத்த அல்லது மனநோயாளிகளாக இருந்தால் மருத்துவம் பார்க்க வேண்டும் என்று நிறைய பேர் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் பார்த்து நான் ஒன்றே ஒன்று மட்டும் கேட்கிறேன்.

நான் உணர்வுபூர்வமாக கேள்வி எழுப்பினாலும், முன்னேறிய, மனித சிந்தனை மிகுந்த, அறிவுப்பூர்வமாக எதையும் பார்க்கக் கூடிய, கொடூர குற்றவாளிகளை மன நோயாளியாக மட்டுமே பார்த்து பரிதாப் படுகிற, இரக்க சுபாவம் கொண்ட, மன்னிக்கத் தெரிந்த ஆத்மாக்கள் இல்லை இல்லை மகாத்மாக்கள் எனக்கு பதில் சொல்லட்டும்.

நான் ஒரு மனநோயாளி என்று வைத்துக் கொள்ளலாம். எனக்கு காம வெறி அதிகம், பெண்களின் மீது இச்சை அதிகம், மற்றவர்களை துன்புறுத்தி அதில் சுகம் காணும் குணம் கொண்டவன். அடுத்த உயிரினை சித்திரவதை செய்து கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் ஆவல் நிறைந்தவன்.

ஒருநாள் என்ன பண்ணுகிறேன், என்னைப் போன்ற மனநோயாளிகளுக்கு வக்காலத்து வாங்கி, அவர்கள் மீது கருணை காட்டும் ஒரு மகாத்மாவின் மனைவியையோ அல்லது சகோதரியையோ அல்லது அவருடைய 5 வயது கொழு கொழு மகளையோ, கடத்தி வந்து, அவர்களை வன்புணர்ச்சி செய்து, பிறகு கண்களை நோண்டி, கை, கால் விரல்களை வெட்டி எரிந்து, முகத்தை சிதைத்து கொடூரமாக, இல்லை இல்லை மனநோயாளி போல் கொன்று விடுகிறேன்.

இப்போது அந்த மகாத்மா என்னை மன்னித்து, "ஐய்யோ பாவம் இவன், மனநிலை சரியில்லாமல் என் மனைவியை கொன்று விட்டான் / என் சகோதரியை கற்பழித்துக் கொன்று விட்டான்/ என் 5 வயது மகளை சிதைத்து அழித்து விட்டான், இவனை மன்னித்து விடலாம், நானே வேண்டுமானால் இவனுக்கு வைத்தியம் செய்து சரி பண்ணுகிறேன்" என்பாரா? இல்லை என் விடுதலைக்கு குரல் குடுப்பாரா?? சிதைக்கப்பட்டு, சாகடிக்கப்பட்ட தன் மனைவி/சகோதரி/மகள் ஆகியோருக்கு இறுதிசடங்கை செய்து விட்டு, ஒரு கொலைகாரனுக்கு இந்த மகாத்மாக்கள் வக்காலத்து வாங்குவார்கள் என்றால்... இவர்கள்... நிஜமாகவே மகாத்மாக்கள் தான்... நான் காட்டுமிராண்டி தான்.

2 Comments:

  • At Thu Aug 26, 07:49:00 PM EDT, Blogger Mookku Sundar said…

    நல்ல கேள்விதான். முகுந்த் கிட்ட கேட்டீங்களா..??

     
  • At Fri Aug 27, 01:52:00 AM EDT, Blogger Gyanadevan said…

    பொதுவா யார் வாய்சண்டை/வாக்குவாதம் பண்ணும் போது சொல்லுவாங்க.. "டேய் என்னைப்பத்தி என்ன வேணா பேசு, ஆனா என் குடும்பத்தை இதுல இழுக்காதே"ன்னு. காரணம் அது ரொம்ப உணர்ச்சிவசப்பட வைக்கும். அதுக்கு தான் யாரையும் நேரடியா கேட்க கூடாதுன்னு பொதுவா கேட்டேன்.இருந்தாலும் பயம்மா இருக்கு. பல எதிரிகள் எனக்கு உருவாகிடுவாங்களோன்னு :-(

     

Post a Comment

<< Home