தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Saturday, December 04, 2004

மீண்டும் இந்த அடியேன்

வணக்கம் மீண்டும் இந்த அடியேன் வலைபதிவுலகத்தில் அடியெடுத்து வைக்கிறேன். ஒருவழியாக சென்னையில் ஒரு வீடு பார்த்து, தொலைபேசி இணைப்பு வாங்கி, இன்று தான் இணைய இணைப்பும் வாங்கினேன். இரண்டு மாதமாய் படிக்காமல் விட்ட அனைத்து வலைபதிவுகளையும் படித்து விட வேண்டும் என்று முடிவுடன் இருக்கிறேன். சென்னை ரொம்பவும் என்னை அலைகழித்து விட்டது. எல்லாவற்றையும் இணையத்திலேயே செய்து முடித்து பழக்கப்பட்ட சோம்பேறித்தனத்தால், இங்கு வந்து அலுவலகம் அலுவலகமாக அலைந்து திரிந்து அல்லாடிவிட்டேன். 1 மணி நேரத்தில் தொலைபேசி, இணையம்,சமையல் எரிவாயு, வீட்டு வரி பெயர் மாற்றம், மின்சார கட்டண பெயர் மாற்றம் என்று பலவற்றையும் இருந்த இடத்திலேயே லண்டனில் செய்து முடித்த நான், இங்கே வந்து ஒவ்வொன்றுக்கும் அலைந்த கதையை சொல்ல ஆரம்பித்தால், ஒரு பெரும் தொடர்கதை போல் ஆகி விடும். ஆகவே, இந்த புலம்பலை இத்தோடு நிறுத்தி விட்டு சில புது விஷயங்களுடன் வருகிறேன்.

பரபரப்பான தமிழ்நாடு. படுகொலைகளும், கொள்ளைகளும், கைதுகளும், யூகங்களுமாய் தினம் ஒரு திடுக்கிடும் திருப்பங்களுடன் ஒவ்வொரு தினமும் ஆரம்பிக்கிறது. இதற்கு நடுவில் தான் ஒரு சராசரியனின் வாழ்க்கையும் நடக்கிறது அமைதியாய். எப்படி???? ஒரு பார்வையாளனுக்கு நடப்பதை பார்ப்பதை தவிர வேறு எந்த அதிகாரமும் இல்லாததால் அவன் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு, சில வார்த்தைகளை மட்டும் உதிர்த்து விட்டு தன் வேலையில் மூழ்குகிறான். இதை தவிர வேறு அவன் என்ன செய்து விட முடியும்? அப்படி ஏதேனும் செய்ய முற்பட்டால் அவனும் நாளை செய்தியாகி விடுவானோ? ஒரு உண்மை கதை சமீபத்தில் நடந்தது.. அது...

3 Comments:

Post a Comment

<< Home