தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Wednesday, December 08, 2004

பயணம் - பணயம்

தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்வது உயிரை பணயம் வைப்பதற்கு சமம் என்பது என் சமீபத்திய இரண்டு பயணங்கள் நிரூபித்தது.

1. சென்னையிலிருந்து திருச்சி
2. திருச்சியில் இருந்து சேலம்

நான் ஓட்டிக்கொண்டு போனது சாதாரண மாருதி ஆம்னி வாகனம் தான். 4 சக்கரம் தான் இருந்தது. ஆனால் எதிரே முந்தி கொண்டு வரும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இதையெல்லாம் ஒரு வாகனமாய் கருதியதாய் தெரியவில்லை, என்னை பல முறை சாலையில் இருந்து இறக்கி உயிர் பயம் உண்டாக்கி தன் காரியமே கண்ணாய் சென்றுக் கொண்டிருத்தனர். அதுவும் இருட்டிய பிறகு கேட்கவே வேண்டாம் கண்ணை கூசும் விளக்குகளுடன் காட்டுத்தனமாய் பேயை விரட்டிக் கொண்டு போவது போல் அப்படி ஒரு அசுர வேகத்துடன் ஒவ்வொருவரும் எதிரே வரும் போது மறுநாள் சன் டிவி, தினத்தந்திகளில் நாமும் வந்து விடுவோமோ என்று பயம் மனதில் உருள்கிறது.

ஏன் இப்படி அவசரம்? புரியவில்லை :-( சாலைகளில் பள்ளம் பார்ப்பதில்லை. பேருந்துகள் தட தடத்து போய் கொண்டே இருக்கிறது. 4 நாய்கள், 2 லாரிகள், 1 ஜீப் இப்படி 300 கிலோமீட்டர் பயணம் செய்வதற்குள் இத்தனை விபத்துகளை பார்த்தேன். ஒவ்வொரு முறையும் பேருந்து ஒரு லாரியை முந்தும்போது எதிரே வரும் வாகனம் பாதையை விட்டு விலகியே செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறது. இந்தியாவில் விபத்துகள் மலிந்து விட்டதில் ஆச்சரியமே இல்லை :-(

இன்னொரு விஷயமும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அது பேருந்து ஓட்டுனரின் தைரியம். அதை பாராட்டியே ஆக வேண்டும். அதே நேரத்தில் அவர் ஒரு விபத்தை உண்டாக்க கூடிய சாத்திய கூறுகள் அதிகமாய் இருப்பது நல்லதல்ல.

சாலைகளை விரைவில் அகலபடுத்துவதும், வேகத்தை கண்காணிப்பதுமே இதற்கான தீர்வாக இருக்கும். அதுவரை தினமும் செய்திகளை பார்த்து உச் கொட்ட மட்டுமே முடியும் :-(

1 Comments:

  • At Sat Mar 12, 12:05:00 PM EST, Blogger ராஜா said…

    /திருச்சியிலிருந்து சேலம்/
    ம்ம்.. நம்ம ஊர் வழியாக போயிருக்கீங்க.

    தொடர்ந்து எழுதுங்க ஞானதேவன். பதிவதை நிறுத்த வேண்டாம்.

     

Post a Comment

<< Home