தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Friday, July 14, 2006

பத்து மடங்கு கிடைக்கும்

ஒரு கணவனும் (அவன்)மனைவியும் அவர்கள் புதிதாக வாங்கிய காரில் சுற்றுலா சென்றனர். அது ஒரு பெரிய மலை பிரதேசம். ஒரு அழகான இடம் வந்ததும், மனைவி சொன்னாள்,

"அத்தான் வண்டியாய் ஓரமா நிறுத்துங்க கொஞ்ச தூரம் நடக்கலாம்"

மனைவியின் பேச்சுக்கு மறுபேச்சா?? வண்டியை கணவன் ஓரமாய் நிறுத்தினான். இருவரும் இறங்கி சோம்பல் முறித்தனர்.

எல்லோருக்கும் ஆவது போல், மலை உச்சி, குளிர் எல்லாம் சேர்ந்ததால் கணவனுக்கு இயற்கை அழைப்பு வந்து விட்டது. அவன் மனைவியிடம் ஜாடை செய்து விட்டு சிறிது தள்ளி நடந்தான்.

நடந்து கொண்டிருந்த மனைவி, ஓரத்தில் பாறையை ஒட்டி விழும் சிறிய நீர்வீழ்ச்சி அருகில் நின்றாள். அவளின் காலுக்கு கீழே ஒரு அருவெருப்பான தவளை இருந்தது. அதை பார்த்ததும் 2 அடி பின்னால் போனாள். உடனே தவளை பேசியது.

"பெண்ணே, பயப்படாதே, நான் ஒரு முனிவனின் சீடன். குரு கோபம் கொள்ளுமாறு நடந்து கொண்டேன். அதனால் கோபம் கொண்ட அவர் என்னை தவளையாய் போ என்று சபித்து விட்டார். உன் போன்ற பெண் என்னை முத்தமிட்டால் எனக்கு சாப விமோசனம் கிடைக்கும்" என்றது

தவளை பேசுவதை கேட்டு ஆச்சரியம் அடைந்தவள், தவளையிடம்

"நீ சொல்லுவது நிஜம் தானா?" என்றாள்

" ஆம் பெண்ணே, நான் சொல்லுவது அத்தனையும் நிஜம். நான் பழைய நிலைக்கு திரும்பியதும் உனக்கு 3 வரங்களை தருகிறேன். நீ
வேண்டியதை கேட்கலாம்" என்றது.


ஒரு சில விநாடிகள் யோசித்த அந்த பெண், குனிந்து அந்த தவளைக்கு முத்தமிட்டாள். உடனே அந்த தவளை, ஒரு மனிதனாக மாறியது.

" நன்றி பெண்ணே. உன்னால் நான் மனிதன் ஆனேன். நான் சொன்னபடி உனக்கு 3 வரங்களை தருகிறேன். என்ன வேண்டுமோ கேள். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை....." என்று இழுத்தான்.

பெண் கொஞ்சம் கோபமாகவே.. " என்ன நிபந்தனை சொல்.." என்றாள்

"நீ திருமணம் ஆன பெண் என்பதால், நீ என்ன கேட்க்கிறாயோ, அது உன் கணவனுக்கு பத்து மடங்காய் போய் சேரும். அதாவது, நீ உனக்காக 100 பவுன் தங்கம் கேட்டால், உன் கணவனுக்கு 1000 பவுன் தங்கம் சேரும். பரவாயில்லையா? "

"பரவாயில்லை.. நான் அவரின் மனைவி தானே. அவர் சொத்து என் சொத்து போல். அதனால் ஒன்றும் பாவம் இல்லை. அவருக்கு என்னை விட 10 மடங்கு சேரட்டும்" என்றாள்.

"சரி உன் வரங்களை கேள்" என்றான் சீடன்.

"நான் தான் இந்த உலகத்தின் அழகான பெண்ணாக இருக்க வேண்டும். இது தான் என் முதல் வரம்" என்றாள்.

"உன் கணவன் உன்னை விட பத்து மடங்கு அழகாக ஆகி விடுவான். மற்ற பெண்கள் எல்லாம் அவன் மேல் மையல் கொண்டு சுற்றி வருவார்கள். பரவாயில்லையா?" என்றான் சீடன்.

"பரவாயில்லை. நான் தானே அத்தனை பெண்களையும் விட அழகாக இருப்பேன். அதனால் எனக்கு கவலை இல்லை. என் கணவன் எனக்கு தான்" என்றாள்.

"சரி. தந்தேன். உம்.. என்ன உன் 2வது வரம்" என்றான் சீடன்.

"நான் தான் உலகத்தில் பெரிய பணக்காரியாக இருக்க வேண்டும்" என்றாள்.

"மீண்டும் சொல்கிறேன். உன் கணவன் உன்னை விட 10 மடங்கு பணக்காரனாய் இருப்பான். ஒத்துக் கொள்கிறாயா?" என்றான் சீடன்.

"ம். கவலை இல்லை. அவர் பணம் என் பணம் எல்லாம் ஒன்று தான்." என்றாள்.

" சரி தந்தேன். என்ன உன் 3 வது வரம்" என்றான் சீடன்.

பெண் சிறிது யோசித்து விட்டு..
"எனக்கு மிக லேசான ஹார்ட் அட்டாக் வர வேண்டும்"
என்று சொல்லி விட்டு மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.

" சரி தந்தேன்" என்றான் சீடன். உடனே மறைந்தான்.

கதையின் உட்கருத்து:
பெண்கள் மிகவும் புத்திசாலிகள். அவர்களை லேசாக எடை போட கூடாது.

பின் குறிப்பு 1:
இத்துடன் இந்த கதை முடிகிறது. எல்லா பெண்களும் சந்தோஷமாய் அடுத்த வேலையை பார்க்க செல்லலாம். நன்றி.


பின் குறிப்பு 2:
ஆண்களே நீங்கள் மட்டும் இந்த கதையை தொடருங்கள்...

கதை தொடர்ச்சி...

மனைவியின் 3வது வரம் இப்படியாக வேலை செய்தது.அவள் கேட்ட லேசான ஹார்ட் அட்டாக் போல் பத்து மடங்கு லேசான ஹார்ட் அட்டாக் கணவனுக்கு ஏற்பட்டது. அதனால் அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை. இயற்கை அழைப்புக்கு போய் விட்டு சந்தோசமாய் மனைவியை நோக்கி வந்தான்.

கதையின் உண்மையான உட்கருத்து:
பெண்கள் தங்களை புத்திசாலிகளாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்..:-)

பின் குறிப்பு 3:
இக்குறிப்பை யாரேனும் பெண்கள் படித்துக் கொண்டிருந்தால்.. கீழ்க்கண்ட பொன்மொழி உண்மையாகிறது.

"பெண்கள் சொல் பேச்சைக் கேட்பதில்லை."

பின் குறிப்பு 4:
இது மொழி மாற்றம் செய்யப்பட்டது. சொந்த சரக்கல்ல.

3 Comments:

Post a Comment

<< Home